பீகார் தேர்தல் முடிவுகள்: அனைவருக்குமான பாடம்.. நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றது. இந்நிலையில் நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "பீகார் தேர்தல் முடிவுகள் அனைவருக்குமான பாடம். மூத்த தலைவர் நிதிஷ்குமாருக்கு வெற்றிக்காக நான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் அவர் சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன். அதேபோல், இளம் தலைவர் தேஜஸ்வி யாதவின் ஓய்வில்லாத பிரச்சாரத்தையும், முயற்சியையும் நான் பாராட்டுகிறேன்.

தேர்தல் முடிவுகள் என்பவை நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைதல், கூட்டணிகள், தெளிவான அரசியல் செயல்பாடுகள் மற்றும் இறுதி வாக்குப்பதிவு வரை அர்ப்பணிப்புடன் கூடிய நிர்வாகம் ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன. இந்தியா கூட்டணியின் தலைவர்கள், இந்தத் தேர்தல் செய்தியைப் புரிந்துகொண்டு, உருவாகி வரும் சவால்களை எதிர்கொள்ள வியூக ரீதியாகத் திட்டமிடக்கூடிய அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் ஆவர்.
இந்தத் தேர்தலின் முடிவு, இந்திய தேர்தல் ஆணையத்தின் தவறான செயல்களையும், பொறுப்பற்ற நடவடிக்கைகளையும் மூடிமறைத்துவிடாது. தேர்தல் ஆணையத்தின் மதிப்பு மிகக் குறைந்த நிலையில் உள்ளது. இந்த நாட்டின் குடிமக்கள், வலுவான, மேலும் பாரபட்சமற்ற ஒரு தேர்தல் ஆணையத்தை பெற உரிமையுடையவர்கள். அத்தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வெற்றி பெறாதவர்களிடம்கூட நம்பிக்கையைத் தூண்டும் வகையில் இருக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
#BiharElection2025: Lessons for everyone
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) November 15, 2025
I congratulate veteran leader Thiru. @NitishKumar for his decisive victory and wish him well in fulfilling the expectations of the people of #Bihar. I also appreciate young leader Thiru. @yadavtejashwi for his tireless campaign.
Election…
பீகாரில் மொத்தமிருக்கும் 243 தொகுதிகளில் பாஜக 89 தொகுதிகளையும், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. அதேபோல என்டிஏ கூட்டணியில் இருக்கும் LJPRV கட்சி 19 தொகுதிகளிலும், HAMS கட்சி 5 தொகுதிகளிலும், RSHTLKM கட்சி 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. 122 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்கலாம். ஆனால் என்டிஏ கூட்டணி 200க்கும் அதிகமான தொகுதிகளை வென்றிருக்கிறது. இருப்பினும் வாக்கு சதவீதத்தில் ஆர்ஜேடி முன்னிலையில் இருக்கிறது.
ஆர்ஜேடி - 23%
பாஜக - 20.08%
ஜேடியு - 19.25%
-
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
சட்டமன்ற தேர்தல்.. புல் ஃபோர்ஸில் இறங்கிய ஸ்டாலின்! முதல் நாளே வேட்பு மனு தாக்கல் -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications