பீகார்: மோடிக்காக ஓட்டு போட்டது 3% பேர்.. வேலை வாய்ப்புக்காக 30% ஓட்டு- இந்தியா டுடே எக்சிட் போல்
பாட்னா: பீகாரில் கிட்டத்தட்ட நிதிஷ்குமார் சகாப்தம் முடிவடைந்து விட்டதாகவே தெரிகிறது. பல்வேறு டிவி சேனல்கள் மற்றும் ஆய்வு அமைப்புகள் இணைந்து வெளியிட்ட எக்ஸிட் போல் முடிவுகள் அதைத்தான் அறுதியிட்டுக் கூறுகின்றன.
Recommended Video
பீகாரில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்வைத்த 'துருவ அரசியல்' எடுபடவில்லை என்பதை இந்தியா டுடே கருத்துக்கணிப்பு தெளிவாக காட்டுகிறது.
பொதுவாகவே மத விஷயங்களை முன்வைத்துதான் வாக்குகளை பாஜக கேட்கிறது என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது. ஆனால் பீகாரில் வளர்ச்சி வேண்டும் என்பதுதான் வாக்காளர்களின் கோரிக்கையாக இருந்துள்ளது.

வளர்ச்சி வேண்டும்
இந்தியா டுடே மற்றும் ஆக்ஸிஸ் போல் இணைந்து நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் இது தெளிவாக தெரியவந்துள்ளது.
வளர்ச்சி என்பதற்காக வாக்களித்ததாக 42 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பு பிரச்சினைக்காக ஓட்டு போட்டதாக 30% பேர் தெரிவித்துள்ளனர். விலைவாசி ஏற்றம் தங்களது ஓட்டுப் போடும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியதாக 11 சதவீதம் பேர் கூறினர்.

மோடிக்கு 3 சதவீதம்தான்
கட்சியை பார்த்து ஓட்டு போட்டதாக 3% பேர் மட்டும் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடிக்காக ஓட்டு போட்டதாக மூன்று சதவீதம் பேர் கூறியுள்ளனர். எனவே பீகாரில் மோடி அலை இல்லை என்றே தெரிகிறது. ஜாதி பார்த்து ஓட்டு போட்டதாக 1 சதவீதம் பேரும், தேசிய பாதுகாப்பு விஷயத்தை கருத்தில் கொண்டு 1 சதவீதம் பேரும், நிதிஷ்குமாருக்காக 1 சதவீதம் பேரும் ஓட்டு போட்டுள்ளனர்.

அசல் பிரச்சினைகள்
ஆக மொத்தம்.. வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்ற அசல் பிரச்சினைகளைதான் பீகார் வாக்காளர்கள் கவனத்தில் எடுத்து உள்ளனர் என்பதை இந்த கருத்துக் கணிப்பு தெளிவாகத் தெரிவிக்கிறது. இதன் காரணமாகத்தான் வேறு எந்த பிரச்சனையை பற்றியும் காதில் வாங்கிக் கொள்ளாமல் ஆளும் நிதிஷ்குமார் கூட்டணியை மீண்டும் அரியணை கொண்டு வந்து விடக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருந்துள்ளதாக பல்வேறு எக்சிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை
ஏனெனில் பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகளில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் கூட்டணிக்குத்தான் மக்கள் அதிக அளவுக்கு ஓட்டுப்போட்டு உள்ளதாகவும், அல்லது தொங்கு சட்டசபை அமையும் என்றும்தான் தெரிவிக்கப்பட்டுள்ளதே தவிர பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று எந்த ஒரு கருத்து கணிப்பும் தெரிவிக்கவில்லை.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications