பீகார் முதல்வராக நிதிஷ்குமார் நீடிப்பாரா? தேஜஸ்வி யாதவ்-க்கு மகுடமா? தீர்மானிக்கும் 2ம் கட்ட தேர்தல்
பாட்னா: பீகார் முதல்வராக நிதிஷ்குமார் தொடருவாரா? அல்லது ஆர்ஜேடியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மகுடம் சூட்டுவாரா என்பதை தீர்மானிக்க இருக்கிறது இன்றைய 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகள்.
பீகாரின் 243 சட்டசபை தொகுதிகளில் அக்டோபர் 28-ல் 71 இடங்களுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு தற்போது வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
பீகார் முதல் கட்ட தேர்தலில் 54% வாக்குகள் பதிவாகி இருந்தன. 1990களில் நடந்த 3 சட்டசபை தேர்தல்களில்தான் பீகாரில் 60%-க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. கடந்த 2015 தேர்தலில் 56.66% வாக்குகளே பதிவாகின.

கட்சிகள் எத்தனை இடங்களில் போட்டி?
இன்று தேர்தல் நடைபெறும் 94 தொகுதிகளில் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை: ஆர்ஜேடி- 56; பாஜக 46; ஜேடியூ - 43; காங்.24. இதில் பாஜகவுடன் 27 தொகுதிகளில் ஆர்ஜேடி நேரடியாக மோதுகிறது. ஜேடியூவுடன் 24 தொகுதிகளை ஆர்ஜேடி எதிர்கொள்கிறது. பாஜக கூட்டணியான விஐபி கட்சியை 5 தொகுதிகளில் நேருக்கு நேராக ஆர்ஜேடி சந்திக்கிறது.

தேஜஸ்வி, தேஜ்பிரதாப்
ஆர்ஜேடி தலைவர்களான தேஜஸ்வி, தேஜ்பிரதாப் இருவர் போட்டியிடும் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. ரகோபூர் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. தேஜஸ்வி யாதவ். 2010-ல் தேஜஸ்வியின் தாயார் ராப்ரிதேவியை இதே தொகுதியில் பாஜக வீழ்த்தியது. ஆனால் கடந்த தேர்தலில் தேஜஸ்வியிடம் இந்த தொகுதியை பாஜக பறிகொடுத்தது. ஹசன்பூர் தொகுதியில் தேஜ்பிரதாப் போட்டியிடுகிறார். ஜேடியூவின் சிட்டிங் எம்.எல்.ஏ.வான ராஜ்குமார் ராயை எதிர்த்து களம் காண்கிறார் தேஜ்பிரதாப். நிதிஷ்குமார் அமைச்சரவையில் சீனியர்களான ராம்சேவக் சிங், ஷர்வண் குமார், நந்த்கிஷோர் உள்ளிட்டோரும் இன்று களம் காணும் முக்கிய வேட்பாளர்கள்.

2015 தேர்தல் முடிவுகள்
இந்த 94 தொகுதிகளில் 33 இடங்கள் கடந்த 2015 தேர்தலில் ஆர்ஜேடி வெற்றி பெற்றவை. அப்போது ஆர்ஜேடி 42 இடங்களில் போட்டியிட்டு இந்த மகத்தான வெற்றியை பெற்றது. ஜேடியூ 41 இடங்களில் போட்டியிட்டு 30 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. 63 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜகவுக்கு 20 இடங்களும் 11 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு 7 இடங்களும் கிடைத்தன. பாஜக கூட்டணியில் கடந்த முறை இடம்பெற்ற எல்ஜேபி 21 தொகுதிகளில் போட்டியிட்டு 2-ல் வென்றது.

முடிவை தீர்மானிக்கும்
2015 தேர்தலில் ஆர்ஜேடி-ஜேடியூ-காங்கிரஸ் மெகா கூட்டணிக்கு மொத்தம் 70 இடங்களுக்கு மேல் வாரி வழங்கியவை இந்த 94 தொகுதிகள். இதில் 5,000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகள் மட்டுமே 18. இதனால்தான் இன்றைய தேர்தல் ஆர்ஜேடிக்கும் ஜேடியூவுக்கும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இன்றைய தேர்தல் முடிவுகள்தான் நிதிஷ்குமார் முதல்வராக தொடர்ந்து சரித்திரம் படைப்பாரா? அல்லது இளம் தலைவராக உருவெடுத்திருக்கிற தேஜஸ்விக்கு பீகார் மகுடம் சூட்டுமா? என்பதை தீர்மானிக்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications