நிதிஷ்குமாரின் காலை வாரும் பாஜக? பீகாரில் 'பிளான் மகா'-வை அமல்படுத்த முடிவு! தப்புமா ஜேடியு?

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் மாநிலத்திற்கு அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தற்போது முதல்வராக இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார், பாஜகவுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை எதிர்கொள்கிறார். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், இதற்கு முன்னர் இரு கட்சிகளும் கூட்டணியில் இருந்த போது சம எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிட்டது கிடையாது என்பதுதான். அந்த வகையில் கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த தேர்தலில் பாஜகவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் ஒரே எண்ணிக்கையில் போட்டியிடுகின்றன.

இதற்கு பின்னால் பெரிய திட்டம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். அதாவது, பீகாரில் என்டிஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமார் அறிவிக்கப்பட்டாலும், நிதிஷ்குமாரை கழற்றிவிட பாஜக திட்டமிட்டிருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Bihar Election 2025 Bihar

இது குறித்து பிரண்ட் லைன் இதழில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "பாஜக மத்திய அரசுடன் சேர்த்து மாநில அரசையும் கட்டுப்படுத்தும் போது, அது அதிகாரத்துவத்தையும் தன்வசப்படுத்துகிறது. ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அரசு அமைப்பில் ஆழமாக ஊடுருவியுள்ள நிலையில், பாஜக ஆளும் மாநிலங்களில் தேர்தல் மற்றும் நிர்வாகத்தின் அனைத்து வழிமுறைகளும் ஒன்றிணைகின்றன. இந்தியத் தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளின் புகார்களை பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை.

தேர்தல் வரும்போது, நலத்திட்டங்கள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் மத்திய அரசின் ஆதரவுடன் திடீரென செயல்படுத்தப்படுகின்றன. இதற்கு தேர்தல் ஆணையம் மௌனமாக துணை நிற்கிறது. இதெல்லாம் நடந்தும் கூட, உத்தரப் பிரதேசத்தில், 2024 பொதுத் தேர்தலில் பாஜக 29 இடங்களை இழந்தது அதன் எண்ணிக்கை 62 இல் இருந்து 33 ஆக குறைந்தது.

கூட்டணியில் இருந்து ஆக்கிரமிப்பு வரை

சட்டப்பேரவை தேர்தல்களில் மாநில கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைக்கும்போது, அது மிகவும் கறாராக செயல்படுகிறது. மகாராஷ்டிராவில், உத்தவ் தாக்கரே ஆட்சியை கவிழ்ப்பதற்காக, பிளவுபட்ட சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவை பாஜக முதலில் முதல்வராக ஆதரித்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஷிண்டேவை மண்ணின் மைந்தன் என்றெல்லாம் சித்தரித்தது. அவரது பெயரில் நேரடி பணப் பரிமாற்றத் திட்டங்களையும் வெளியிட்டது. ஆனால், ஒரு வருடத்திற்குப் பிறகு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு, அது முதல்வர் பதவியை திரும்ப எடுத்துக்கொண்டது. இதன் மூலம் ஒரு கூட்டணியை ஆக்கிரமிப்பாக மாற்றியது.

நிதிஷ் குமாருக்கும் இதேபோன்ற திட்டம் பயன்படுத்தப்படலாம். அவருடைய உடல்நிலை குறித்த ஊகங்கள் நிலவுகின்றன. அவரால் எந்த முடிவையும் உறுதியாக எடுக்க முடியவில்லை. காரணம் வயதாகவிட்டதால் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. அவருடன் இருக்கும் முக்கிய அதிகாரிகள்தான் அரசாங்கத்தை நடத்துகிறார்கள் என்றெல்லாம் பேச்சுக்கள் அடிபடுகின்றன. இப்படி இருக்கையில் கடந்த இருபது ஆண்டுகளில், பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் (JD(U)) சம எண்ணிக்கையிலான தொகுதிகளில் முதல் முறையாக போட்டியிடுகிறது. முன்பு JD(U) எப்போதும் அதிக தொகுதிகளில் போட்டியிட்டது.

பீகார் வியூகம் என்னவென்றால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (EBC) வாக்குகளைப் பெறுவதற்கு நிதிஷ் குமாரை கூட்டணிக்கு முன்னிறுத்த வேண்டும். ஆனால், பாஜக JD(U)-ஐ விட அதிக இடங்களைப் பெற்றால், நிச்சயம் பெறும். ஏனெனில் கடந்த தேர்தலில் இது சாத்தியமாகி இருக்கிறது. அப்படி நடக்கும்போது நிதிஷ்குமாரை கைவிட வேண்டும் என்பதே.

2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், லோக் ஜனசக்தி கட்சியை வாக்கு பிரிக்கும் கருவியாக மட்டுமே பாஜக பயன்படுத்தியது. இதன் மூலம் நிதிஷ் குமாரின் தொகுதிகளை குறைத்து, தனது கூட்டணிக் கட்சியை விட, தான் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்தது. லோக் ஜனசக்தி கட்சிக்கு இந்த முறை 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பது, தேர்தலுக்குப் பிறகு அது பாஜகவுடன் இணைந்து செயல்படும் என்பதைக் காட்டுகிறது.

உண்மையில், பாஜக சிறிய, சாதி அடிப்படையிலான கட்சிகளை வெறும் வெற்று ஷெல் நிறுவனங்களாக இயக்குவதில் திறமையானது என்று கூறலாம். நிதிஷ் குமார் சடங்கு ரீதியாக அரியணையில் அமர்த்தப்பட்டிருக்கலாம், ஆனால் அவரது JD(U) இப்போது பாஜகவுக்குச் சொந்தமான ஒரு பிரதேசத்தில் சூழப்பட்ட ஒரு சக்தியாகத் தெரிகிறது.

ஆயினும்கூட, நிதிஷ் குமார், EBC பிரிவினரிடையே தனக்குள்ள அபரிமிதமான ஆதரவு மற்றும் பல ஆண்டுகால முதல்வர் அனுபவம் காரணமாக அவ்வளவு எளிதில் சிக்க மாட்டார். அவரது வெளிப்படையான ரகசிய ஆயுதம் என்னவென்றால், அவர் எப்போதும் கட்சியை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் இத்தகைய அனைத்து கணக்கீடுகளும் சரியான எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டே இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+