வேப்பந்தட்டை வேத மாரியம்மன் கோயில் திருவிழா.. தேரோட்டம் குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பெரம்பலூர்: நூற்றாண்டு பழமையான வேத மாரியம்மன் கோயில் திருவிழாவில் தேரோட்டத்தில் பிரச்சனை எழுந்ததையடுத்து, இந்த ஆண்டு தேர் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்குள் செல்ல வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தில் இந்த வேத மாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. கடந்த 1993ம் ஆண்டு இந்த கோயில் முதல் முறையாக தேர் திருவிழா நடைபெற்றது.

இதனையடுத்து இரு பிரிவினர்களுக்கு இடையே பிரச்சனை அதிகரித்ததால் தொடர்ந்து 32 ஆண்டுகளாக திருவிழா நடக்காமல் இருந்தது. பிறகு இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பிரச்சனை பேசி தீர்க்கப்பட்டு, கடந்த ஆண்டு தேர் திருவிழா விமர்சையாக நடந்தது. இந்த ஆண்டும் அதேபோல திருவிழா நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரச்சனை மீண்டும் வெடித்தது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் இரு பிரிவினருக்கும் தேரில் சம உரிமை வழங்கப்பட வேண்டும்.
தங்கள் தெருக்களிலும் தேர் வர வேண்டும் என்று ஒரு தரப்பினர் உரிமை கோரினர். இதனையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் தரப்பில் இரு தரப்பினர் இடையே சமாதானம் பேசப்பட்டது. ஆனால் இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனையடுத்து இப்பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கு காரணமாக இந்த ஆண்டு கோயில் திருவிழா நடக்கவில்லை.
திருவிழா நாளில் ஒரு தரப்பினர் தேர் வேண்டும் என்றும், இன்னொரு தரப்பினர் தேர் வந்தால் எங்கள் வீதிகளுக்கும் வர வேண்டும் எனவும் கோரினர். இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தேர் பட்டியல் இன சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் போக வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications