வேப்பந்தட்டை வேத மாரியம்மன் கோயில் திருவிழா.. தேரோட்டம் குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பெரம்பலூர்: நூற்றாண்டு பழமையான வேத மாரியம்மன் கோயில் திருவிழாவில் தேரோட்டத்தில் பிரச்சனை எழுந்ததையடுத்து, இந்த ஆண்டு தேர் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்குள் செல்ல வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தில் இந்த வேத மாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. கடந்த 1993ம் ஆண்டு இந்த கோயில் முதல் முறையாக தேர் திருவிழா நடைபெற்றது.

இதனையடுத்து இரு பிரிவினர்களுக்கு இடையே பிரச்சனை அதிகரித்ததால் தொடர்ந்து 32 ஆண்டுகளாக திருவிழா நடக்காமல் இருந்தது. பிறகு இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பிரச்சனை பேசி தீர்க்கப்பட்டு, கடந்த ஆண்டு தேர் திருவிழா விமர்சையாக நடந்தது. இந்த ஆண்டும் அதேபோல திருவிழா நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரச்சனை மீண்டும் வெடித்தது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் இரு பிரிவினருக்கும் தேரில் சம உரிமை வழங்கப்பட வேண்டும்.
தங்கள் தெருக்களிலும் தேர் வர வேண்டும் என்று ஒரு தரப்பினர் உரிமை கோரினர். இதனையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் தரப்பில் இரு தரப்பினர் இடையே சமாதானம் பேசப்பட்டது. ஆனால் இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனையடுத்து இப்பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கு காரணமாக இந்த ஆண்டு கோயில் திருவிழா நடக்கவில்லை.
திருவிழா நாளில் ஒரு தரப்பினர் தேர் வேண்டும் என்றும், இன்னொரு தரப்பினர் தேர் வந்தால் எங்கள் வீதிகளுக்கும் வர வேண்டும் எனவும் கோரினர். இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தேர் பட்டியல் இன சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் போக வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications