Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்தடுத்து சிக்கும் அரசு ஊழியர்கள்.. கடலூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் அதிரடியாக கைது

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள தொரவலூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் என்ற விவசாயி, தனக்கு சொந்தமான நிலத்தை அளந்து அத்து காட்டுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். பின்னர், இது தொடர்பாக அவர், தொரவலூர் கிராம நிர்வாக அலுவலர் தனசேகரை அணுகி உள்ளார். அப்போது வேலாயுதத்தின் நிலத்தை அளந்து அத்து காட்ட, தனசேகர் தனக்கு லஞ்சமாக ரூ.10 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தனசேகர் கையும் களவுமாக சிக்கி கைதாகி உள்ளார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள தொரவலூர் கிராமத்தை சேர்ந்த 68 வயதாகும் வேலாயுதம் என்பவர் அந்த பகுதியில் விவசாயம் செய்து வரும் விவசாயி ஆவார். விவசாயி வேலாயுதம் தனக்கு சொந்தமான நிலத்தை அளந்து அத்து காட்டுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். பின்னர், இது தொடர்பாக அவர், தொரவலூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் பண்ருட்டி எல்.ஆர்.புரத்தை சேர்ந்த தனசேகர் (33) என்பவரை அணுகியிருக்கிறார்.

Village Administrative Officer arrested for taking bribe near Cuddalore

அப்போது வேலாயுதத்தின் நிலத்தை அளந்து அத்து காட்ட, தனசேகர் தனக்கு லஞ்சமாக ரூ.10 ஆயிரம் தர வேண்டும் என கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே லஞ்சம் கொடுக்க விரும்பாத வேலாயுதம், உடனே கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கூறிய அறிவுரையின்படி நேற்று வேலாயுதம் ரசாயன பொடி தடவிய ரூ.10 ஆயிரத்தை, தொரவலூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்த தனசேகரிடம் கொடுத்திருக்கிறார். அப்போது அந்த பணத்தை வாங்கிய போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பிஎ சத்தியராஜ் தலைமையிலான போலீசார், கிராம நிர்வாக அலுவலர் தனசேகரை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவத்தால் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வீட்டிற்கு நகராட்சியில் ரசீது போடுவதற்காக பெரம்பலூர் நகராட்சி வருவாய் ஆய்வாளரான புதுக்கோட்டை மாவட்டம், சின்ன அய்யன் வயல் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் ரூ.25 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் புகாரின் பேரில் நகராட்சி வருவாய் ஆய்வாளர் கண்ணனை பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அடுத்தடுத்து கடந்த சில நாட்களாகவே அரசு அதிகாரிகள் கையும் களவுமாக சிக்கி கைதாகி வருகிறார்கள். ஒரே நாளில் இரண்டு பேர் வெவ்வேறு இடங்களில் கைதாகி உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+