புதுச்சேரியில் இன்று முதல் 29ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு!
புதுச்சேரி: ஏனாம் மாவட்டத்தில் இன்று முதல் 29ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மக்களவை தொகுதியில் கடந்த 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்து வரும் வியாழக்கிழமை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஏனாம் பிராந்தியத்தில் இன்று முதல் வரும் 29ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி செயல்படுவோர் மீதும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏனாம் மாவட்ட ஆட்சியர் சிவராஜ் மீனா தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கையின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சிவராஜ் மீனா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications