தமிழக பகுதியில் இறங்கக்கூடாது.. கடும் கட்டுப்பாடுகளுடன் புதுவை-காரைக்காலுக்கு பேருந்து சேவை தொடக்கம்
புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து தமிழகத்தின் இரு மாவட்டங்களை கடந்து புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதிக்கு புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சமூக இடைவெளியுடன் பயணிகள் பேருந்துகள் சேவை தொடங்கியது.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நான்காவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை புதுச்சேரி அரசு அறிவித்தது. அதில் புதுச்சேரிக்குள் பேருந்துகளை இயக்குவது என அறிவிக்கப்பட்டு நேற்று முதல் உள்ளூர் பேருந்துகள் பல்வேறு வித்தடங்களில் இயக்கப்பட்டது.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தின் ஒரு பகுதியான காரைக்கால் மாவட்டத்திற்கும் பேருந்துகளை இயக்க புதுச்சேரி அரசு முடிவெடுத்தது. புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி என கடலூர் மற்றும் நாகை மாவட்டங்கள் வழியாக காரைக்காலுக்கு பேருந்துகள் செல்ல வேண்டுமென்பதால் கடலூர் மற்றும் நாகை மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதி கோரப்பட்டது.

இதனையடுத்து தமிழக பகுதிகளில் பயணிகளை ஏற்றவோ இறக்கவோ கூடாது என்ற நிபந்தனையுடன் இரு மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதி பெறப்பட்டதை தொடர்ந்து, இன்று காலை முதல் காரைக்காலுக்கு புதுச்சேரி அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது.

முன்னதாக பேருந்தில் ஏறும் பயணிகள் முகக்கவசம் அணிந்தும், கைகளில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு பேருந்தில் ஏற்றப்பட்டார்கள். மேலும் சமூக இடைவெளியுடன் 32 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பேருந்து புறப்படுவதற்கு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாறன், பயணிகளிடம் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் வழிகாட்டுதலுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், தமிழக பகுதிகளில் இறங்கக்கூடாது என அறிவுறுத்தினார். பயணிகளின் வரவேற்பை பொறுத்து கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications