கொலையில் முடிந்த கேங் வார்.. ரவுடி பாண்டியன் வெட்டி படுகொலை.. புதுச்சேரியில் பரபரப்பு!

புதுச்சேரியில் மாலை நேரத்தில் ரவுடி பாண்டியன் வெட்டி கொலை செய்யப்பட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் மாலை நேரத்தில் ரவுடி பாண்டியன் வெட்டி கொலை செய்யப்பட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியை சேர்ந்தவர் பிரபல ரவுடி பாண்டியன். பல்வேறு கொலை மற்றும் கொள்ளைகளை செய்த பாண்டியனை போலீசார் தேடி வந்தனர்.

புதுச்சேரி போலீஸ் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா போலீசும் இவரை தேடி வந்தது. கடந்த ஒரு வருடமாக இவர் தலை மறைவாக இருந்தார்.

பகை காரணம்

பகை காரணம்

அதேபோல் முன் பகை காரணமாக புதுச்சேரியில் வேறு சில ரவுடி குழுக்களும் பாண்டியனை தேடி வந்தது. இந்த நிலையில்தான் புதுச்சேரியில் மாலை நேரத்தில் ரவுடி பாண்டியன் வெட்டி கொலை செய்யப்பட்டார். தனியாக நடந்து செல்லும் போது இந்த கொலை நடந்துள்ளது.

எத்தனை பேர்

எத்தனை பேர்

பாண்டியனை பின் தொடர்ந்து வந்த 5 பேர், அவரை சுற்றி வளைத்து, அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள். சரமாரியாக அரிவாளால் வெட்டி அங்கிருந்து பைக்கில் தப்பித்து சென்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் நேரத்தில் இந்த கொடூர கொலை நடந்துள்ளது.

யார் கொன்றது

யார் கொன்றது

இந்த சம்பவத்தால் பாண்டியன் சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து இருக்கிறார்கள். அந்த பகுதியில் இருக்கும் கடைகளில் சில முக்கிய வாக்கு மூலங்களை போலீசார் வாங்கி இருக்கிறார்கள்.

என்ன விசாரணை

என்ன விசாரணை

அதேபோல் அங்கு ஏதாவது சிசிடிவி கேமரா கிடைக்கிறதா என்றும் சோதனை செய்து வருகிறார்கள். இந்த கொலை, முன்பகை காரணமாக நடந்து இருக்கலாம். வேறு ஏதாவது ஒரு ரவுடி கும்பல் பாண்டியனை கொன்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+