இது யாரோ சாப்பிட்டு போட்ட எச்சில் பீஸ்?.. கொந்தளித்த யூடியூபர். சர்ச்சையில் இர்ஃபான் உணவகம்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் செயல்படும் பிரபல அசைவ உணவகத்தில் தரமற்ற வகையில அசைவ உணவு வழங்கியதாக யூடியூபர் ஒருவர் புகார் கூறி, வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுச்சேரி வில்லியனூரில் இயங்கி வருகிறது இர்ஃபான் என்ற அசைவ உணவகம். இந்த உணவகம் யூடியூபர்கள் மத்தியில் பிரபலம். இந்த உணவகத்திற்கு யூடியூபர்கள் அதிக அளவில் வந்து ரிவியூ சொல்லி சொல்லி பிரபலப்படுத்திவிட்டார்கள். பார்ப்பவர்களை நாக்கில் எச்சில் ஊரவைக்கும் வகையில் பல்வேறு உணவுகளின் வீடியோக்கள் வெளியானதால் பலரும் இந்த உணவகத்தை நாடி வரத் தொடங்கினர்.

எந்த யூடியூபர்களால் உணவகம் மிகவும் பிரபலம் ஆனதோ, அதே யூடியூபர்களால் சர்ச்சையிலும் சிக்கி உள்ளது. ஒரு யூடியூபர் ரிவியூ செய்வதறகாக வந்தாரோ அல்லது பிடித்த உணவை சாப்பிட வந்தாரோ தெரியவில்லை. அவர் ஆர்டர் செய்த பெப்பர் சிக்கனால் வெடித்தது சர்ச்சை.

பெப்பர் சிக்கன்

பெப்பர் சிக்கன்

யாரோ சாப்பிட்டு போட்ட பீஸை தனக்கு வழங்கி இருப்பதாக கொந்தளித்த யூடியூபர், ரிவியூ வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையானது. இது தொடர்பாக அந்த யூடியூபர் கூறுகையில், பெப்பர் சிக்கன் ஆர்டர் செய்திருந்தேன். ஆனால் பெப்பர் சிக்கன் சூடே இல்லை. பெப்பர் சிக்கனின் அளவும் மிகக்குறைவாகவே இருந்தது. ஒரு எலும்பு மட்டும்தான் இருந்தது. இது கண்டிபப்க ஒரு பீஸ் போட்டு செய்த பெப்பர் சிக்கன் இல்லை என்பது தெரிந்தது. சரி பரவாயில்லை என்று நினைத்து சாப்பிட ஆரம்பித்தால் அதில் ஒரு பீஸ்கறி எதுவும் இல்லாமல் பிரியாணி சாப்பிட்டவர்கள் போட்டு சென்ற எச்சில் எலும்பு போல் இருந்ததால் கோபம் வந்தது என்று வீடியோவில் யூடியூபர் கூறினார்.

சமாளிப்பு

சமாளிப்பு

இதைடுத்து யூடியூபர் கடையின் மாஸ்டரிடம் சென்று பெப்பர் சிக்கன் தயார் செய்யப்பட்ட விதம் குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்திருக்கிறார். அதற்கு மாஸ்டர் தங்கள் கடையில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் முன்கூட்டியே பெப்பர் சிக்கன் தயார் செய்து வைத்து அதை கொடுத்ததாக கூறி சமரசம் செய்துள்ளார். இதை ஏற்காத யூடியூபர், இர்பான் அசைவ உணவக உரிமையாளர் தனக்கு உரிய பதிலை தரவில்லை என்று கூறி யூடியூபர் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதிகாரிகள் ஆய்வு

அதிகாரிகள் ஆய்வு

இதையடுத்து புதுச்சேரி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இர்பான் ரெஸ்டாரண்டிற்கு சென்றார்கள். அங்கு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். சமையல் கூடத்திற்குள் சென்ற அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கிருந்த தாக்காளி சாஸ் பாட்டிலை மட்டும் எடுத்து கீழே போடச் செய்தனர். அதேபோல் அங்கு வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சிக்கனை எடுத்தும் ஆய்வு செய்தனர்.

பொருட்கள் இல்லை

பொருட்கள் இல்லை

மேலும் பரோட்டாக்களையும் ஆய்வு செய்தனர்.ஆனால் கெட்டுப்போன பொருட்களோ அல்லது காலாவதியான பொருட்களோ எதுவும் இல்லை. கடையில் முழுமையாக சோதித்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அங்கிருந்துபுறப்பட்டு சென்றனர். அசைவ உணவு வீடியோக்களால் பொதுமக்களை வெகுவாக கவர்ந்த உணவகம், ஒரே ஒரு சிக்கன் பீஸ் ஏற்படுத்திய சர்ச்சையால் வாடிக்கையாளர்களை அதிர வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+