இயக்குனர் சேரன் கூறிய அறிவுரைகள்.. தனியார் பேருந்து உரிமையாளர்கள் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
புதுச்சேரி: இயக்குனர் சேரன் விதிமுறையை மீறி அதிக சத்தத்துடன் ஹாரனை ஒலிக்கவிட்டுச் சென்ற தனியார் பேருந்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. இந்த விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் சேரன் கூறிய அறிவுரைகளை ஏற்பதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புகாரும் அளிக்கப்படவில்லை.
ஆட்டோகிராப், சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிசம், முரண், யுத்தம் செய் போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர் இயக்குனர் சேரன். இவர் அண்மையில் கடலூர் மாவட்டம் பெரியகங்கணா குப்பத்தின் வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் புதுச்சேரியில் இருந்து சேரன் கடலூர் நோக்கி தனியார் பேருந்து வேகமாக ஒன்று வந்தது. அந்த பேருந்தின் டிரைவர் பஸ்சை வேகமாக இயக்கியதோடு, தொடர்ந்து ஹாரன் அடித்தபடி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஒரு கட்டத்தில் கோபமடைந்த சேரன் தனது காரை சாலையில் நிறுத்தி கீழே இறங்கினார். பின்னால் வந்த தனியார் பஸ்சும் நடு சாலையில் நின்றது. அப்போது தனியார் பேருந்தை வழிமறித்து ஏன் இப்படி சத்தமாக ஹாரன் அடிக்கிறீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பஸ் ஓட்டுனரின் செயலை இயக்குனர் சேரன் கண்டித்தார். இந்த வீடியோ வெளியாகி வைரலாக பரவியது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் சேரனை சமாதானம் செய்து அனுப்பி வைத்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடலூரில் தனியார் பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இயக்குனர் சேரன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. சிசிடிவி காட்சிகளுடன் இயக்குநர் சேரன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும், புகாரில், இயக்குநர் சேரன் நடுவழியில் தகராறு செய்தது தவறு என்று தெரிவிக்கப்பட்டதாகவும் செய்திகள் பரவின. ஆனால் அதிகாரப்பூர்வமாக புகார் குறித்தோ வழக்கு பதிவு செய்தது குறித்தோ எந்த தகவலும் வெளியாகவில்லை..
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தற்போது சமரசம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஹாரன் அடிப்பதாக கூறி தனியார் பஸ் டிரைவரிடம் சேரன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பான தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஆலோசித்தனர்.
இதை தொடர்ந்து தற்போது தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், “ நாங்கள் இயக்குனர் சேரன் கூறிய அறிவுரைகளை கருத்தில் கொள்கிறோம். எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு அறிவுரை கூறியுள்ளோம். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க காவல் துணை காணிப்பாளரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இயக்குனர் சேரன் மீது குறிப்பிட்டு எந்த புகாரும் அளிக்கவில்லை” இவ்வாறு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications