"எம்பிபிஎஸ் படித்துவிட்டு ஐஏஎஸ் ஆவது தான் லட்சியம்.." 498 மார்க் எடுத்து சாதித்த புதுவை மாணவன்
புதுவை: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 498 மார்க் எடுத்துள்ள மாணவர் பரத்குமார், தான் இந்த சாதனையை எட்ட பெரிய ரிஸ்க் எடுக்கவில்லை என்றும், எம்பிபிஎஸ் படித்துவிட்டு, யுபிஎஸ்சி தேர்வு எழுதி ஐஏஎஸ் ஆவதே எனது லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 498 மார்க் எடுத்துள்ள மாணவர் பரத்குமார், தான் இந்த சாதனையை எட்ட பெரிய ரிஸ்க் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும், 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு எம்பிபிஎஸ் படித்துவிட்டு, யுபிஎஸ்சி தேர்வு எழுதி ஐஏஎஸ் ஆவதே எனது லட்சியம் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து மாணவர் பரத்குமார் கூறியதாவது:-

என் பெயர் பரத்குமார். இப்போது முடிந்த 10 ஆம் வகுப்பு தேர்வில் 498 மார்க் எடுத்துருக்கிறேன். புதுச்சேரியில் ஸ்டேட் பர்ஸ்ட் மற்றும் தமிழகத்தில் ஸ்டேட் செகண்ட்ஸ் ஆக வந்திருக்கிறேன். இங்கே நான் மட்டும் இந்த டார்கெட்டை அஜ்ஜீவ் பண்ணிவிட்டேன் என்று சொல்ல முடியாது. எனது நன்றிக்கடனை எனது பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் தெரிவித்து கொள்கிறேன்.
நான் இந்த மார்க் எடுப்பதற்கு ரொம்ம ஸ்டிரஸ் எடுத்துக்கொள்ளவில்லை. தினமும் பள்ளியில் சொல்லிக்கொடுப்பதை இரவில் ஒரு முறை படிப்பேன். பின்னர் அதிகாலையில் 4 மணிக்கு எழுந்திருந்து மீண்டும் ஒருமுறை ரிவைஸ் செய்வேன். அவ்வளவு தான். எனது பள்ளி ஆசிரியர், பிரின்ஸ்பெல் என எல்லாருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
11ஆம் வகுப்பில் நான் பையாலஜி குரூப் எடுக்கிறேன். 12ஆம் வகுப்பு முடித்த பிறகு ஒரு டிகிரி முடிக்க இருக்கிறேன். அதாவது எம்பிபிஎஸ் படிக்க முடிவு எடுத்திருக்கிறேன். இதன்பிறகு யூபிஎஸ்சி தேர்வு எழுதி ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பது தான் எனது ஆசை. நன்றி.. இவ்வாறு அவர் கூறினார்.
எஸ்எஸ்எல்சி எனப்படும் பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த தேர்வினை தமிழ்நாடு முழுவதும், 8,94,264 மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். தேர்வு எழுதிய மாணவ - மாணவிகளில் 8,18,743 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது இந்த ஆண்டு 91.55 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விடவும் அதிகரித்து உள்ளது என்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த பொதுத்தேர்வில் 3 மாணவிகள், 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். திண்டுக்கல், திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் 499 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
இதேபோல், தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் முதலிடத்திலும், இரண்டாம் இடத்தில் சிவகங்கை மாவட்டமும், மூன்றாம் இடத்தை ராமநாதபுரமும், 4வது இடத்தை கன்னியாகுமரியும், 5 ஆம் இடத்தை திருச்சி மாவட்டமும் பிடித்துள்ளது. சென்னையை எடுத்துக்கொண்டால் 89.14 சதவிகித தேர்ச்சியுடன் 30ஆம் இடத்தில் உள்ளது.
பள்ளிகள் வாரியாக பார்த்தால், அரசுப் பள்ளிகள் 87.90%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 91.77%, தனியார் பள்ளிகள் 91.43%, இருபாலர் பள்ளி 91.93%, பெண்கள் பள்ளிகள் 93.80% என தேர்ச்சி விகிதம் இருக்கிறது. இந்த நிலையில், தமிழக அளவில் 2 ஆம் இடத்தையும், புதுச்சேரியில் முதலிடத்தை பிடித்து பரத்குமார் என்ற மாணவர் சாதித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications