ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமான வரி சோதனை.. வீடியோ வெளியிட்டு நாராயணசாமி கடும் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: தேர்தல் தோல்வி பயத்தால் பாஜகவுடன் அதிமுக சேர்ந்து ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் வருமானவரி சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது என்றும், பாஜக கூட்டணிக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமான வரி சோதனை.. வீடியோ வெளியிட்டு நாராயணசாமி கடும் ஆவேசம் - வீடியோ

    திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியதாவது,

    களங்கம் விளைவிக்க சோதனை

    களங்கம் விளைவிக்க சோதனை

    திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது கண்டிக்கத்தக்கது. தோல்வி பயத்தால் பாஜக, அதிமுக வருமானவரித்துறையை ஏவிவிட்டு, ஸ்டாலின் குடும்பத்துக்கு களங்கம் விளைவித்து, மக்கள் மத்தியில் தவறான கருத்து பரப்பவே இந்த சோதனையை நடத்துகிறது. பாஜக எதிர்க்கட்சிகளை திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தெளிவாக தெரிகிறது.

    மக்கள் ஏற்க மாட்டார்கள்

    மக்கள் ஏற்க மாட்டார்கள்

    எதிர்க்கட்சி தலைவர்களின் குடும்பங்கள் பெயருக்கு களங்கம் விளைவிக்க தேர்தல் நேரத்தில் இந்த வேலையை செய்கிறார்கள். இது பாஜகவுக்கு கைவந்த கலை. ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை செய்ததை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். தேர்தல் நெருக்கமான நேரத்தில் நடக்கும் இச்சோதனையின் உள்நோக்கம் மக்களுக்கு தெளிவாக தெரியும்.

    ஸ்டாலின் முதல்வராவார்

    ஸ்டாலின் முதல்வராவார்

    பல சோதனைகளை திமுக கண்டுள்ளது. அவர்கள் அஞ்சபோவதில்லை. எதிர்த்து நிற்பார்கள். நீதி, நியாயம் வெல்லும். திமுக கூட்டணி வெல்லும் ஸ்டாலின் முதல்வராவார். பழிவாங்கும் நடவடிக்கையை மோடியும், அமித்ஷாவும் நிறுத்திக்கொள்ள வேண்டும். பாஜகவும், அதிமுகவும் தோல்வியை ஒப்புக்கொண்டுதான் வருமாவரித்துறையை தேர்தல் நேரத்தில் ஏவி களங்கம் விளைவிக்கிறது.

    களங்கம் விளைவிக்கவே

    களங்கம் விளைவிக்கவே

    திமுகவிற்கு எதிராக சதி வருமானவரித்துறை, சிபிஐ முலம் எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டுவதையும், அவர்களின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை தமிழக, புதுச்சேரி மக்கள் ஏற்க மாட்டார்கள். அடுத்து திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்கவும், களங்கம் விளைவிக்கவே இதை செய்கிறார்கள். இவர்களது பகல் கனவு பலிக்காது " இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+