சந்திர பிரியங்காவை சுற்றும் சர்ச்சைகள்.. அமைச்சர் பதவி இருக்கா இல்லையா? குழப்பமா இருக்கே
புதுச்சேரி: அமைச்சர் பதவி ராஜினாமா.. பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார் என சந்திர பிரியங்காவை சுற்றி சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. இந்த நிலையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளார். சந்திரபிரியங்கா அமைச்சராக நீடிக்கிறாரா என்று குழம்பிய நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் புதுச்சேரி சபாநாயகர் செல்வம்.
புதுச்சேரியின் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தவர் சந்திர பிரியங்கா. அமைச்சராக பதவியேற்றது முதல் தனது செயல்பாடுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தனக்கென்று ஒரு ஆதரவாளர்கள் கூட்டத்தை உருவாக்கினார். திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கு ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்றார்.
கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநர், முதல்வர் அலுவலகங்களுக்கு கடிதங்களை அனுப்பி வைத்தார். சந்திர பிரியங்கா தனது கடிதத்தில், "ஜாதி, பாலின ரீதியில் நான் தாக்குதலுக்கு உள்ளானேன்" என்று குறிப்பிட்ட கருத்து கடும் விவாதத்தை கிளப்பியது. இது பற்றி முதல்வர் ரங்கசாமி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் தரப்பில் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
பணியில் சரியாக செயல்படாத காரணத்தால் சந்திர பிரியங்காவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியிருப்பதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை குறிப்பிட்டார். முதல்வரின் பரிந்துரையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டு, மத்திய உள்துறைக்கு அக்கோப்பு அனுப்பப்பட்டது. அதே நேரத்தில்
இதுவரை சந்திர பிரியங்காவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பான அரசாணை வெளியாகவில்லை. இவ்விவகாரம் தொடர்ந்து சர்ச்சையில் உள்ளது.
இதற்கிடையே, தான் அமைச்சர் பதவியில் செயல்பட்டது குறித்து 9 பக்க சாதனைப் பட்டியல் ஒன்றை வெளியிட்ட சந்திர பிரியங்கா, அதன்பின் தனது சமூக வலைதள 'அட்மின்' மூலம் ஆளுநர் தமிழிசையை விமர்சித்தார். அதன் பிறகு எந்த வித கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வருகிறார்.
இந்தச் சூழலில், சந்திர பிரியங்கா வசித்து வரும் துய்மா வீதியில் உள்ள புதுவை அரசு இல்லத்தில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.
சட்டசபையிலும் அவரின் அறை இன்னும் காலி செய்யப்படாமல் இருந்து வருகிறது. அரசு கார், பாதுகாப்பு ஏதும் திருப்பி பெறப்படவில்லை. அவரும் ஒப்படைக்க வில்லை. இந்த சர்ச்சைக்கு இடையே சந்திர பிரியங்கர் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். காரைக்காலில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றதாக அமைச்சர் அலுவலகம் செய்தி குறிப்பு வெளியிட்டது. இது குழப்பத்தை அதிகரித்தது.

இதனிடையே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் செல்வம் அளித்துள்ள பேட்டியில், சந்திர பிரியங்கா வகித்த துறைகளை முதல்வர் என்.ஆர் ரங்கசாமியே கவனிப்பார் என்று கூறியுள்ளார். போக்குவரத்து துறை வெளியிட்டது தவறான தகவல் என்றும் சபாநாயகர் செல்வம் கூறியுள்ளார். அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அரசாணை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறியுள்ளார் செல்வம்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications