தெலுங்கானா என்கவுண்டர் இறைவன் கொடுத்த தண்டனை.. நாராயணசாமி கருத்து
புதுச்சேரி: தெலுங்கானா என்கவுண்டர் இறைவன் கொடுத்த தண்டனை என்றும், இதன்மூலம் குற்றவாளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமெனவும் முதலமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேரையும் இன்று காலை தெலுங்கானா போலீசார் குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்றபோது அவர்கள் தப்பிச்செல்ல முயன்றதால் நான்கு பேரையும் போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர். குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த போலீசாருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கானா என்கவுண்டர் குறித்து கருத்து தெரிவித்துள்ள புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, தெலுங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் கற்பழித்து கொள்ளப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் 4 பேர் காவல்துறையினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இதுபோன்ற நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
இந்த தண்டனை இறைவன் கொடுத்த தண்டனையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் குற்றவாளிகள் இச்சம்பவத்திலிருந்து பாடம் கற்றுகொள்ள வேண்டும். புதுச்சேரியிலும் பெண்கள் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், மக்கள் பிரச்சினைகளை மத்திய அரசு கருத்தில் கொள்ளாமல், அரசை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. தனிமனித சுதந்திரம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. வெங்காயத்தின் விலை உயர்வு சாதாரண மக்களை அதிகமாக பாதித்துள்ளது.
ஆனால் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராம் பூண்டு, வெங்காயம் குறைவாக சாப்பிடுகிறேன் என மக்களுக்கு அறிவுரை கூறுகிறார். விலைவாசி குறைக்க வேண்டியது அரசின் கடமை. பொருளாதார வீழ்ச்சியை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. கடுமையான வீழ்ச்சியில் பொருளாதாரம் உள்ளது என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications