நான் ஒரு சாமியார்.. போட்டியிடச் சொன்னா போட்டியிடுவேன்.. நாராயணசாமி அதிரடி
Recommended Video

புதுச்சேரி: எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு என்று ஒன்றும் கிடையாது. லோக்சபா தேர்தலில் கட்சி தலைமை கேட்டுக்கொண்டால் நான் போட்டியிவேன். நான் ஒரு சாமியார் என்று கூறி அதிர வைத்துள்ளார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நேற்று முன்தினம் பாகிஸ்தான் தீவிரவாத முகாமில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்திய ராணுவம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள நிலையில், துரதர்ஷ்டவசமாக அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் பிடியில் சிக்கியுள்ளார். உடனடியாக அவரை பாகிஸ்தான் விடுவிக்க இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தை அரசியல் செய்யக்கூடாது எனக்கூறிவிட்டு தற்போது பாஜகவினர் பாகிஸ்தான் தீவிர முகாம்கள் மீதான தாக்குதலை அரசியல் ஆக்கக்கூடாது.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்தியபோது அதிகாரிகளுக்கு தேர்வு எழுத வைப்பது சரிதானா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை. ஆனால் தொடர்ந்து அவர் அதிகாரிகளுக்கு தேர்வு வைத்து வருகின்றார்.
இது வெறும் காகிதம் தான், அவர்களுக்கு எந்தவிதத்திலும் உதவாது. கிரண்பேடி தொடர்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகின்றார் என்றார் நாராயணசாமி. வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிவீர்களா என செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு என்று ஒன்றும் கிடையாது, கட்சி தலைமை கேட்டுக்கொண்டால் நான் போட்டியிவேன் என்று கூறிய அவர், நான் ஒரு சாமியார் என்றும் பதிலளித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications