தவறான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளுக்கு தடை.. புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுவை: தவறான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் தடை செய்யப்படும் என புதுவை முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடரின் 3 ஆம் நாள் கூட்டம் இன்று காலை தொடங்கியது. அப்போது சில செய்தித்தாள்கள் தவறான செய்திகளை வெளியிடுவதாகவும் ஆர்என்ஐ அனுமதியில்லாத செய்தித்தாள்களை தடை செய்ய வேண்டும் என எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர்.
அப்போது முதல்வர் ரங்கசாமி பேசுகையில் பதிவு செய்யப்படாத பத்திரிகைகள் புதுவையில் தடை செய்யப்படும். தவறான செய்திகளை வெளியிடும் செய்தித்தாள்கள் மீது இந்த தடை நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

முதல்வர் ரங்கசாமி
2022- 2023 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை கடந்த 22 ஆம் தேதி முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். கடந்த 10- ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் சட்டசபை வளாகத்திற்கு வந்து உரையாற்றினார். இதையடுத்து பட்ஜெட் கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டது.

பட்ஜெட்டுக்கு அனுமதி
பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் அனுமதி கிடைக்காததால் தான் சபை ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது புதுவையின் பட்ஜெட் ரூ.10 ஆயிரத்து 700 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து கடந்த 22 ஆம் தேதி புதுவை சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

பட்ஜெட் கூட்டத் தொடர்
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை நேரடியாக இணையதளம் மற்றும் கேபிள் டிவி வழியாக காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி டுவிட்டர், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டுள்ளது. புதுவையில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு அதாவது 21 வயது முதல் 55 வயது வரை உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 திட்டம் குறித்து அறிவித்தார்.

இலவச லேப்டாப்
அது போல் 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டத்தையும் பிற வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டத்தையும் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காரைக்கால் மாவட்டத்தில் வன அறிவியல் மையம் அமைக்கப்படும். புதுவை மற்றும் காரைக்காலில் 5 முட்டை பொறிப்பகம் அமைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications