புதுச்சேரி...அதிகரித்து வரும் கொரோனா தொற்று...ஒரே நாளில் 20 பேர் உயிரிழப்பு!!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் முதன்முறையாக கொரோனாவால் ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 587 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முதன் முறையாக புதுச்சேரியில் அதிகம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியில் 525 பேரும், காரைக்கால் 18, ஏனாம் 44, மாஹே 4 பேர் அடங்குவர். இதனால் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15744 ஆக உயர்ந்துள்ளது.

Coronavirus deaths increased in Puducherry to 20 in a single day

இதே போல் ஒரே நாளில் அதிகபட்சமாக முதன்முறையாக கொரோனாவுக்கு 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 280 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 5218 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10674 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது புதுச்சேரியில் பாதிப்பு எண்ணிக்கை 16172 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செப்டம்பர் 2ஆம் தேதி காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 363 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. 12 பேர் உயிரிழந்து இருந்தனர். இந்த நிலையில் இன்று 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+