புதுச்சேரி அரசின் நிதிநிலைமை மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது.. நாராயணசாமி பேட்டி
புதுச்சேரி: கொரோனா பிரச்சனை காரணமாக புதுச்சேரி அரசின் நிதிநிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, புதுச்சேரியின் நிதிநிலைமை குறித்து கவலை தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில், புதுச்சேரி அரசின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. ஏனெனில் தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் வருவாய் மிகவும் குறைந்துள்து. கூடுதல் நிதி ஒதுக்குமாறு மத்திய அரசை பலமுறை வலியுறுத்தியும் அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை
புதுச்சேரி மாநில அரசின் நிதியில் இருந்துதான் செலவினங்களை நாங்கள் நிர்வகித்து வருகிறோம் அத்துடன் கொரோனா நிதி மற்றும் பேரழிவு மேலாண்மை நிதியைப் பயன்படுத்துகிறோம். இதனால் எங்களால் வரிகளை உயர்த்த முடியாது நிலை உள்ளது.
மாநில அரசுக்கு தர வேண்டிய இழப்பீடு மத்திய அரசிடம் இருந்து கிடைப்பதில்லை .கடந்த ஐந்து மாதங்களாக மத்திய அரசு ரூ .700 கோடியை தர வேண்டியுள்ளது. அதை இதுவரை தரவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications