"தற்கொலையா".. சேச்சே.. தப்பா புரிஞ்சுக்கிட்டீங்களே.. அந்தர் பல்டி அடித்த ஜெகத்ரட்சகன்!
ஜெகத்ரட்சகன் தன் பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார்
புதுச்சேரி: தற்கொலை செய்து கொள்வதாக நான் சொல்லவே இல்லை.. நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் விளக்கம் அளித்துள்ளார்.
திமுக - காங்கிரஸ் இடையே தமிழகத்தில் கூட்டணி இழுபறியில் உள்ளது.. புதுச்சேரியில் திமுக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.. ஜெகத் ரட்சகனையும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க யோசித்து வருகிறது.

இதற்கு காரணம், புதுச்சேரியில் வன்னியர் வாக்குகள் 60 சதவீதத்துக்கு மேல் உள்ளதுதான்... ஜெகத் ரட்சகன் திமுகவில் சீனியர் என்பதாலும், வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதாலும், அவரை வேட்பாளராக நிறுத்தும் முயற்சியில் திமுக இறங்கி உள்ளது.
இந்த சமயத்தில்தான் ஜெகத்ரட்சகன் பேசும்போது, புதுச்சேரியில் திமுக வெற்றி பெறாவிட்டால் இதே மேடையில் தற்கொலை செய்வேன் என்றார்.. ஜெகத் பேசியதை கேட்டு, திமுகவின் முக்கிய தரப்பு மட்டுமல்ல, காங்கிரஸ் தரப்பும் அதிர்ந்துவிட்டது.. இது விவாதப்பொருளாகவும் சோஷியல் மீடியாவில் உருவெடுத்தது.
இந்நிலையில் தான் அப்படி பேசவில்லை என்று ஜெகத்ரட்சகன் விளக்கம் தந்துள்ளார்.. காரைக்கால் திமுக நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசும்போது, புதுச்சேரி மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று புதுச்சேரியில் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது... நாங்கள் என்றால் கூட்டணியுடன் சேர்ந்து வெற்றி பெற்று, திமுக தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று தான் அர்த்தம்.
மற்றபடி, யாருடன் கூட்டணி, எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்வார். கூட்டணியில் யார் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், திமுக போட்டியிடுவதாக நினைத்து ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றார். அப்படியானால், ஜெகத்ரட்சகன் தந்துள்ள இந்த விளக்கத்தை பார்த்தால், காங்கிரஸை இணைத்தே திமுக இந்த தேர்தலை சந்திக்கும் என்று தெரிகிறது..!
-
ஸ்டாலினின் ரூ. 8000 கூப்பன் Vs எடப்பாடியின் இலவச Fridge திட்டம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
அதிமுக மாஜிகளுக்கு கட் அவுட்..திமுக உ.பி.களுக்கு கெட் அவுட்டா? 19 சீட்டுகளை அள்ளிய ’அம்மா’ பிள்ளைகள் -
ரூ.2000 ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமைத் தொகை.. மாணவிகளுக்கு இனி ரூ.1500! ஸ்டாலின் வாக்குறுதி! -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
வேட்பாளரை மாற்றுங்க.. அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்ட.. தாம்பரம் எம்எல்ஏ SR ராஜா ஆதரவாளர்கள் -
ஆண்டிப்பட்டியில் மீண்டும் ‘சகோதர யுத்தம்’.. அண்ணன் திமுக vs தம்பி அதிமுக.. வெல்லப்போவது யார்? -
அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு! ஸ்டாலின் சொன்ன மேஜர் அறிவிப்பு! திமுக சிக்ஸர் வாக்குறுதி -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
நன்னிலம் தொகுதி வேட்பாளர் முகமது முபாரக்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எஸ்டிபிஐ! -
OPS: விருப்ப மனு கொடுத்தும் சீட் கிடைக்கலையே.. திடீரென அண்ணா அறிவாலயம் வந்த ஓபிஎஸ் மகன்! -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க












Click it and Unblock the Notifications