பிரசித்தி பெற்ற கோவில் தேரில் தீ.. மளமளவென பரவியதால் பதறிய பக்தர்கள்! புதுச்சேரியில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியில் அம்மன் கோயில் தேர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர் மீது பட்டாசு தீப்பொறி விழுந்ததால் விபத்து நிகழ்ந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்தக் கோவியில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி திருவிழாவில் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

Fire Breaks Out in Temple Chariot at Veerampattinam Puducherry

தற்போது அந்தக் கோவில் தேர் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தக் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இரவு நேரத்தில் தேர் தீப்பற்றி எரிந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இரவு பூஜைக்காக பட்டாசு வானவேடிக்கை நிகழ்வு நடைபெற்றது. சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர் கூரை கொட்டகை மீது பட்டாசு தீப்பொறி விழுந்ததால் மளமளவென தீ பற்றி விபத்து நிகழ்ந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட்து. அங்கிருந்த மக்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயற்சித்தனர். சிறிதுநேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+