தமிழகத்தில் ஆளுநரும் முதல்வரும் எலியும் பூனையுமாக இருக்கிறார்கள்.. தமிழிசை சவுந்தரராஜன்

Subscribe to Oneindia Tamil

புதுவை: தமிழகத்தில் ஆளுநரும் முதல்வரும் எலியும் பூனையுமாக இருக்கிறார்கள் என்றும், மக்களுக்காக ஆளுநரும் முதல்வரும் இணைய வேண்டும் என்று புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதுவை வந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக புதுவை முதல்வர் ரங்கசாமியும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராராஜனும் நேற்று இரவு ஆலோசனை நடத்தினர். இதன் பிறகு, ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் இன்று விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- மக்களுக்காக ஆளுநரும், முதல்வரும் இணைந்து செயல்படுவதே அரசாங்கம்.

Follow the Puducherry model - Lieutenant Governor Tamilisai Soundararajan

ஆளுநரும் முதல்வரும் இணக்காமக செயல்பட்டால்தான் மக்கள் நல திட்டஙக்ளை செயல்படுத்த முடியும் என்பதற்கு புதுச்சேரிதான் உதாரணம். புதுச்சேரியில் முதல்வரும் துணை நிலைஆளுநரும் இணக்கமாக உள்ளோம். நள்ளிரவு 12 மணிக்கு கூட மக்கள் நலத்திட்டங்கள் குறித்து நானும் முதல்வரும் விவாதித்து உள்ளோம். தமிழகத்தில் ஆளுநரும் முதல்வரும் எலியும் பூனையுமாக இருக்கிறார்கள். பிரதமர் கூறிய படி முதல்வரும் ஆளுநரும் இரட்டை என்ஜின் போல செயல்பட்டு இந்த மாநிலத்தை முன்னுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+