விற்பனைக்கு வந்த அரிய வகை பறவைகள்.. புதுவையில் பறிமுதல்.. அதிகாரிகள் வார்னிங்!
புதுச்சேரி: புதுச்சேரியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கொக்கு, கிளி, மைனா உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட பறவைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி பாதுகாக்கப்பட்ட பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்வதை தடுக்க வனத் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இப்பணியில் வனத்துறை ஊழியர்கள் மட்டுமின்றி 50 க்கும் மேற்பட்ட வன ஆர்வலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறை தீவிர நடவடிக்கை எடுத்தாலும், பறவைகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வரும் நிலைதான் புதுச்சேரியில் இருந்து வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி அருகே உள்ள ஒதியம்பட்டு, கூடப்பாக்கம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் பறவைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், அங்கு சாலையோரத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, 30 க்கும் மேற்பட்ட கொக்குகள், பச்சை கிளிகள், நொல்ல மடையான், மைனா உள்ளிட்ட பறவைகளை கைப்பற்றினர். மேலும் வனத்துறை அதிகாரிகள் வருவதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட பறவை வியாபாரிகள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சமூக விரோதிகள் பாதுகாக்கப்பட்ட பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்தாலும், அவற்றை பொதுமக்கள் வாங்கக் கூடாது என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதையும் மீறி பறவைகளை வேட்டையாடுபவர்கள் மற்றும் அவற்றை உணவிற்காக வாங்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது. மேலும் பறவைகளை வேட்டையாடுபவர்களுக்கு 7 வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications