கிரண்பேடிக்கு அளிக்கப்பட்ட ஐந்தடுக்கு பாதுகாப்பு வாபஸ்.. திரும்பிச் சென்ற துணை ராணுவப் படை
புதுச்சேரி: முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு வழங்கப்பட்ட ஐந்தடுக்கு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
Recommended Video
புதுச்சேரியில் கடந்த ஐந்தாண்டு காலமாக ஆளுநராக பொறுப்பு வகித்து வந்தவர் கிரண் பேடி. இவருக்கும் ஆளும் காங்கிரஸ் அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவிவந்தது.

இதனால் ஆளும் காங்கிரஸ் அரசு, துணைநிலை ஆளுநருக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் அறிவித்ததை அடுத்து, துணைநிலை ஆளுநர் மாளிகையை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோயம்பத்தூரில் உள்ள ஐந்து கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டனர். இந்நிலையில் மத்திய அரசு கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற்று, அவருக்கு பதிலாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை பொறுப்பு ஆளுனராக நியமித்தது.
இதனால் முன்னாள் ஆளுநர் கிரண்பேடிக்கு அளிக்கப்பட்டிருந்த 5 அடுக்கு பாதுகாப்பு நீக்கப்பட்டதை அடுத்து ஆளுநர் மாளிகை சுற்றி அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் மற்றும் முள்வேலிகள் அகற்றப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு பணிக்கு வந்த துணை ராணுவ படையினர் கோயம்பத்தூர் திரும்பி சென்றனர்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications