பிரான்ஸ் அதிபரை தேர்வு செய்ய.. புதுச்சேரி, காரைக்கால் மட்டுமல்ல, சென்னையிலும் வாக்குப் பதிவு!
புதுச்சேரி: பிரான்ஸ் அதிபர் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு புதுச்சேரி, காரைக்கால் மற்றும் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பிரான்ஸ் குடியுரிமை பெற்ற மக்கள் நீண்ட வரிசையில் நின்றபடி ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் பதவிகாலம் முடிவுக்கு வருவதை அடுத்து அந்நாட்டின் 12 வது அதிபரை தேர்வு செய்தவதற்கான தேர்தல் கடந்த 10 ஆம் தேதி நடந்தது.

2 ஆம் கட்ட தேர்தல்
இதற்கான முதல்கட்ட வாக்குப்பதிவில் 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அந்த தேர்தலில் தற்போதைய அதிபரும் குடியரசு கட்சியின் வேட்பாளருமான இமானுவேல் மேக்ரான் மற்றும் வலதுசாரி பெண் வேட்பாளர் மெரின்லி ஆகிய இருவருக்கும் கடும் போட்டி நீடித்தது. ஆனால் யாருமே 50 சதவீத வாக்குகளுக்கு அதிகமாக பெறாததால், பிரான்ஸ் நாட்டு தேர்தல் விதிகளின்படி இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில் ஆர்வத்தோடு வாக்குப்பதிவு
பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்ற பகுதிகளில் இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 4,600-க்கும் அதிகமான மக்கள் வாக்களிக்க தகுதி பெற்று இருக்கின்றனர். புதுச்சேரியை பொறுத்தவரை கடற்கரை சாலையில் உள்ள பிரான்ஸ் துணை தூதரகம் மற்றும் பிரான்ஸ் பள்ளியில் தலா 2 வாக்குச்சாவடிகள் வீதம் 4 வாக்குச்சாவடிகள் வாக்குப்பதிவுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளன.

காரைக்கால் வாக்குப்பதிவு
இந்த வாக்குச்சாவடிகளில் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்குகளை பதிவு செய்தனர். இதேபோல், காரைக்காலிலும் ஒரு மையம் வாக்குப்பதிவுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அங்கும் மக்கள் ஆர்வமாக பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

சென்னையிலும் பிரான்ஸ் தேர்தல்
அதேபோல் சென்னையிலும் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தோ - பிரான்ஸ் கலாச்சார மையத்தில் நடைபெற்று வரும் இந்த வாக்குப்பதிவில் பிரான்ஸ் குடியிரிமை பெற்ற மக்கள் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். வாக்குப்பதிவை ஒட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

யார் வென்றாலும் சாதனை வெற்றி
இன்று நடைபெறும் தேர்தலில் அதிக வாக்குகள் பெறுபவரே அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார். கடந்த 20 ஆண்டுகளாக பிரான்ஸில் தொடர்ந்து 2 முறை ஒருவர் அதிபராக பதவி வகித்தது இல்லை. இதில் இம்மானுவேல் மேக்ரான் வெற்றிபெற்றால் அந்த பெருமையை அடைவார். அதேபோல் இதில் மெர்லி வென்றால் பிரான்ஸ் நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications