பள்ளிகளுக்கு கோடை விடுமுறை.. மாணவர்களுக்கு வந்த குட்நியூஸ்.. கல்வி அமைச்சர் முக்கிய அறிவிப்பு
புதுச்சேரி: கோடை வெயில் அதிரித்து வருவதால் புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றம் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை முதல் ஜூன் 1ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று பதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. தற்போது முழு ஆண்டு தேர்வு என்பது நடந்து முடிந்து விட்டது.
இருப்பினும் கூட பள்ளிகள் இந்த மாதத்தின் 30ம் தேதி வரை தொடர்ந்து செயல்படும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிப்பு என்பது வெளியிடப்பட்டது. இதனால் ஆண்டு இறுதி தேர்வு முடிந்த பிறகும் கூட பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் தொடர்ந்து சென்று வந்தனர்.

இதற்கிடையே தான் புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கம் என்பது அதிகரிக்க தொடங்கியது. இதனால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை வழங்க வேண்டும். பள்ளி மாணவ-மாணவிகளின் நலன் கருதி இந்த முடிவை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் தான் புதுச்சேரியில் நாளை முதல் கோடை விடுமுறை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் ஆ நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அதிகரித்து வரும் கடும் கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக பதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றம் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை (28.04.2025) முதல் வரும் ஜூன் மாதம் (01.06.2025) வரை தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் பள்ளிகள் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் வழக்கம்போல் செயல்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications