அன்று தமிழக மக்களை.. இன்று தமிழக அரசை.. திரும்ப திரும்ப வம்பிழுக்கும் கிரண்பேடி
புதுவை: அன்று தமிழக மக்களை கடுமையாக விமர்சனம் செய்த புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தமிழக அரசை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதில் சென்னையில் வறட்சி ஏற்பட தமிழக அரசும் மக்களின் சுயநலமும் காரணம் என கிரண்பேடி விமர்சனம் செய்திருந்தார்.
தமிழக மக்களை இவ்வாறு எப்படி கிரண்பேடி குறை சொல்லலாம் என திமுக கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து கிரண்பேடியின் அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடைபெற்றது.

திமுக எம்பி
கிரண்பேடியின் பேச்சு குறித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்பியான டி ஆர் பாலு எழுப்பினார். தமிழக மக்களை விமர்சித்தது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

வருத்தம்
அப்போது பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியபோது, தண்ணீர் பிரச்சினை தொடர்பாக புதுவை துணை நிலை ஆளுநர் வெளியிட்ட கருத்து தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர் தான் கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்ததாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

புதுவையில் தண்ணீர்
இந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு கருத்தை கூறி கிரண்பேடி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் கூறுகையில் தமிழகத்தில் உள்ள எந்த அணையிலிருந்தும் புதுவைக்கு தண்ணீர் வருவதில்லை. நீர் நிலைகள் தூர்வாரப்பட்டதால் தமிழகத்திற்கு கொடுக்கும் அளவுக்கு புதுவையில் தண்ணீர் இருக்கிறது.

விமர்சனம்
ஓராண்டில் பெய்த மழை தண்ணீரை சேர்த்துவைத்ததால் மட்டுமே புதுச்சேரியில் தண்ணீர் பிரச்னை இல்லை. தமிழர்களின் மனம் பாதிக்கும் வகையில் ட்வீட் செய்யவில்லை என தெரிவித்தார். தூர்வார்தல், மழை நீர் சேகரித்தல் விவகாரத்தில் தமிழக அரசை கிரண்பேடி மறைமுக விமர்சனம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications