நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லும் பட்ஜெட்.. கிரண் பேடி ஹேப்பி!
புதுச்சேரி: நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்லக் கூடி பட்ஜெட் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கூறியுள்ளார்.
இன்று தாக்கலான மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் விரிவான வரவு செலவு திட்டம்.
பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மை. சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய பட்ஜெட் என்றும், நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல கூடிய பட்ஜெட் என்று தெரிவித்துள்ளார்.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்ச்சியாக அரசியல் சார்ந்த கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஏற்கனவே 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதேபோல் மற்ற மாநிலங்களில் நடைபெறும் முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்தும் கிரண்பேடி அவ்வபோது தன்னுடைய கருத்துகளை கூறுவது வழக்கம்.
தற்போது மத்திய பாஜக அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் குறித்து ஆதரவான கருத்தை தெரிவித்திருக்கிறார்.