கட்சிகளே.. எங்களுக்கும் அரசியலில் வாய்ப்பளியுங்கள்.. திருநங்கை அப்சரா ரெட்டி கோரிக்கை
Recommended Video
புதுச்சேரி: திருநங்கைகள் அரசியல் மற்றும் அதிகாரத்திற்கு வருவதற்கான வாய்ப்புகளை அனைத்து கட்சிகளும் ஏற்படுத்தி கொடுங்கள் என்று அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் அப்சரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அகில இந்திய மகிளா காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அப்சரா ரெட்டி இன்று மரியாதை நிமித்தமாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை, சட்டமன்ற அலுவலகத்தில் சந்தித்து பேசினார். இந்ந சந்திப்பின்போது புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் உடனிருந்தார்.
முதலமைச்சரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அப்சரா ரெட்டி, பெண்களை இழிவுபடுத்தும் பாஜகவினரை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது. திருநங்கைகள் அரசியலுக்கு வரவேண்டும். அனைத்து கட்சிகளும் அவர்களுக்கு இடம் அளிக்க வேண்டும்.
திருநங்கைகளுக்கு அரசியல் மற்றும் அதிகாரங்களுக்கு வரக்கூடிய சக்தி உள்ளது. அதற்கான வாய்ப்புகளை அனைவரும் ஏற்படுத்தி தர வேண்டும்.
பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 4 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அப்சரா ரெட்டி, புதுச்சேரியில் மகிளா காங்கிரஸின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.