புதுச்சேரியில் கவிழ்ந்த காங்கிரஸ் ஆட்சி.. சட்டசபையில் ஆளும்-எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் காரசார வாதம்
புதுச்சேரி: நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தின் மீது புதுவை முதல்வர் நாராயணசாமி பேசியபோது ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் அமளி ஏற்பட்டது.
Recommended Video
புதுச்சேரி: பெரும்பான்மை ‘நஹி’... காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது… முதலமைச்சர் நாராயணசாமி ராஜினாமா!
புதுச்சேரியில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை சமர்ப்பித்த பிறகு முதல்வர் நாராயணசாமி உரையாற்றினார். அப்போது, புதுச்சேரியில் 3 நியமன உறுப்பினர்களுக்கு வாக்களிக்க அனுமதியளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். காங்கிரஸ் கட்சியினர் நாராயணசாமிக்கு ஆதரவாக கோஷமிட்டனர். இதனால் அமளி நிலவியது.
இதையடுத்து நாராயணசாமி சட்டசபையிலிருந்து வெளியேறினார். அதையடுத்து சபாநாயகர் சிவகொழுந்து பேசுகையில், பேரவையில் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என அறிவித்தார். இதையடுத்து புதுச்சேரி அரசு கவிழ்ந்தது.
Comments
English summary
MLAs from Congress and opposition MLAs are exchange words while CM Narayanaswamy delivered speech.