Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

75-வது சுதந்திர தினம்... 75 அடி ஆழ்கடலில் தேசியக் கொடி... நீச்சல் வீரர் அரவிந்த் அசத்தல்!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி : நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி, புதுச்சேரி ஆழ் கடலில் 75 அடி ஆழத்தில் தேசியக் கொடியை ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்த் ஏற்றி வைத்து அசத்தியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள், இணையதளத்தில் வைரலாகி, அனைவரையும் கவர்ந்து வருகிறது.

Recommended Video

    75-வது சுதந்திர தினம்... 75 அடி ஆழ்கடலில் தேசியக் கொடி...

    நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வருகிற 15-ஆம் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் சுதந்திர தினவிழா உற்சாகத்துடன் கொண்டாடப்படவுள்ளது. சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு நடைபெற உள்ளது. இதற்கு பெருமை சேர்க்கும் வகையில், புதுச்சேரி ஆழ் கடலில் 75 அடி ஆழத்தில் தேசியக் கொடியை ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்த் ஏற்றி அசத்தியுள்ளார்.

     National flag in 75 feet deep sea: Swimmer Aravinds video

    புதுச்சேரி மற்றும் சென்னையில் temple adventure என்ற பெயரில் ஆழ்கடல் பயிற்சி பள்ளியை அரவிந்த் என்பவர் நடத்தி வருகிறார். உள்நாடு மட்டுமல்லாது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர். உலக யோகா தினம், காதலர் தினம், சர்வதேச கிரிக்கெட் போட்டி, கடல் தூய்மை போன்றவற்றிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பல நிகழ்வுகளை கடலுக்கு அடியில் நிகழ்த்தியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக இப்பணியில் ஈடுபட்டு வரும் அரவிந்த் கொரோனா, கடல் தூய்மை, யோகா, உடல் ஆரோக்கியம் போன்றவை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வை ஆழ்கடலில் செய்துள்ளார்.

    உலக மிதிவண்டி நாள் ஜூன் 3-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், புதுவை - தமிழக ஆழ்கடல் நீச்சல் வீரரான அரவிந்த் கடலுக்கு அடியில் மிதிவண்டி ஓட்டி அனைவரையும் பிரமிக்க வைத்தார்.
    மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டை வரவேற்கும் வகையில் சென்னை நீலாங்கரை கடலுக்கு அடியில் ஆழ்கடல் நீச்சல்வீரர்கள் செஸ் விளையாடினார்கள். கடலுக்கு அடியில் 60 அடி ஆழத்தில் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்துடன் சென்னையை சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர்கள், செஸ் விளையாடி வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    அந்த வகையில், தற்போது நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி கடலில் 75 அடி ஆழத்தில் அரியாங்குப்பம் அருகே ஆழ்கடலில் தேசியக் கொடியை நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த் ஏற்றினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி, அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+