Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓமிக்ரான்:கவலைப்படாத புதுச்சேரி என்.ஆர்.காங்.-பாஜக அரசு- சரக்கு விற்பனை நேரத்தை நீட்டித்து உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மதுபானங்கள் விற்பனை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.

 New Year 2022: Puducherry Govt extends Timings of Liquor shops

இதனைத் தொடர்ந்து பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தலைநகர் டெல்லியில் மதுபான பார்கள், ஹோட்டல்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் புத்தாண்டு நாளில் மக்கள் கூட்டம் அலைமோதும்; வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் குவிவார்கள்; ஆகையால் புதுச்சேரியிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று முதலாவது ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங். பாஜக கூட்டணி அரசு, மதுபானங்கள் விற்பனை நேரத்தை நீட்டித்து உத்தரவிட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

புதுச்சேரியில் பார்களில் அதிகாலை 1 மணிவரை மதுபானங்கள் விற்பனை செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுபான கடைகளில் இரவு 11 மணிக்கு மேல் மதுவிற்பனை செய்யக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+