25 ஆம் தேதி முதல் ஸ்டிரைக்.. என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவிப்பு
புதுச்சேரி: நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கைகள் தொடர்பாக புதுச்சேரியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தையில் வரும் 25 ஆம் தேதிக்குள் என்.எல்,சி நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய முடிவெடுக்க தொழிற்சங்கத்தினர் கெடு விதித்துள்ளனர்.
நெய்வேலி என்.எல்.சி யில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றார்கள். இவர்களது நீண்ட நாள் கோரிக்கையான பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கூறி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் 25 ந் தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டம் நடத்த இருப்பதாக அனைத்து தொழிற்சங்கத்தினரும் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கினார்கள்.

இதனையடுத்து புதுச்சேரியில் உள்ள மத்திய தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலகத்தில் மத்திய தொழிலாளர் நல உதவி ஆணையர் கணேசன் முன்னிலையில் என்.எல்.சி நிர்வாக அதிகாரிகள், அண்ணா தொழிற்சங்கம், தொ.மு.ச, சி.ஐடியு உள்ளிட்ட 7 தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சு வார்த்தையில் வரும் 25 ந் தேதிக்கு முன்பாக தொழிலாளர்கள் கோரிக்கைகள் தொடர்பாக என்.எல்.சி நிர்வாகம் ஆலோசித்து உரிய முடிவை எடுக்க என்.எல்.சி அதிகாரிகளுக்கு உதவி ஆணையர் கணேசன் அறிவுறுத்தினார். இதனை ஏற்றுக்கொண்ட தொழிற்சங்கங்கள் 25 ந் தேதிக்கு முன்பாக கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கெடு விதித்தனர். அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் நோட்டீஸ் வழங்கியபடி போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications