48 நாளா கடைய மூடுனா எப்படி.. அதான் வீட்டிலேயே சாராயம் காய்ச்ச ஆரம்பிச்சிட்டோம்.. புதுவையில் பரபர
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஊரடங்கு உத்தரவால் மதுபானம் மற்றும் சாராயக்கடைகள் திறக்காத விரக்தியில் வீட்டுத் தோட்டத்தில் கள்ளச்சாராயம் தயாரித்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கள்ளச்சாராயம் தயாரிக்க பயன்படுத்திய மூலப்பொருளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 4 வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளது. ஊரடங்கால் புதுச்சேரி மாநிலத்தில் மதுக்கடைகள், சாராயக் கடைகள் மற்றும் கள்ளுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் குடிகாரர்கள் மது குடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

மதுபோதைக்கு அடிமையான சிலர் வயல்வெளி, காட்டுப்பகுதி, வீடுகளில் சாராயம், மதுபானம் தயாரித்து குடிக்கின்றனர். இதனை போலீசார் கண்டறிந்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் ஊரடங்கிற்கு நடுவே தமிழகத்தில் இரண்டு நாட்கள் டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டதால், முதல்முறையாக புதுச்சேரியை சேர்ந்த குடிகாரர்கள் தமிழகத்திற்கு சென்று தங்களது உறவினர்கள் மூலம் மதுவை வாங்கி வந்து குடித்தனர்.

சிலர் தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு மது கடத்தியதற்காக கைதும் செய்யப்பட்டனர். இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்திலுள்ள பூவம் கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கோட்டுச்சேரி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கோட்டுச்சேரி காவல்நிலைய ஆய்வாளர் லெனின் பாரதி தலைமையிலான காவலர்கள், பூவம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவிற்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அதே தெருவை சேர்ந்த முருகன் மற்றும் செல்வம் ஆகிய இருவரும் தங்களது வீட்டு தோட்டத்தில் கள்ளச் சாராயம் தயாரித்தது தெரியவந்தது.
பின்னர் கள்ளச்சாராயம் காய்ச்சிய முருகன் மற்றும் செல்வம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, கள்ளச் சாராயம் தயாரிக்க பயன்படுத்திய மூலப்பொருட்களை கைப்பற்றி கலால் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications