அடப்பாவிகளா இப்படியுமா செய்வீங்க .. வீடு தேடிப்போய் பார்த்து.. மிரண்டு போன புதுச்சேரி போலீஸ்
புதுச்சேரி: புதுச்சேரியில் வீட்டு வாசலில் 12 அடி உயரத்திற்கு கஞ்சா செடி வளர்த்த வாலிபர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Recommended Video
புதுச்சேரியில் ஆபரேஷன் விடியல் என்ற பெயரில் கஞ்சா விற்பனையை ஒழிக்க போலீசார் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி அரியாங்குப்பம் ஆய்வாளர் தனசெல்வம் தலைமையில்போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருபவர்களை தொடர்ச்சியாக கைது செய்து வருகிறார்கள்.

கஞ்சா விற்பனை
நேற்று மாலை தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் தன்னிடம் கஞ்சா எதுவும் இல்லை என்று கூறினார். அத்துடன் சந்தை புதுகுப்பம் பகுதியை சேர்ந்த ஞானமூர்த்தி என்பவரிடம் தான் தற்போது புதுச்சேரியில் இருக்கும் அனைவருக்கும் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.

விசாரணையில் தகவல்
இதனை அடுத்து ஞானமுர்த்தியை பிடித்த போலிசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தாம் கஞ்சா அனைத்தையும் விற்று விட்டதாகவும் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரிடம் தான் கஞ்சா வாங்க செல்ல போவதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நாகராஜை பிடிப்பதற்காக அவரது வீட்டிற்கு போலிசார் சென்று சோதனை செய்த போது அங்கு கஞ்சா ஏதுவும் பிடிப்படவில்லை.

அதிர்ந்த போலீஸ்
ஆனால் சோதனை முடித்து வீட்டு வெளியே வந்து பார்த்த போது 12 அடியில் வித்தியாசமான ஒரு செடி வளர்ந்து இருப்பதை கண்ட போலிசார் அதிர்ச்சி அடைந்து அந்த செடியை ஆய்வு செய்த போது அது கஞ்சா செடி என கண்டுப்பிடிக்கப்பட்டது., இதனை அடுத்து நாகராஜிடம் விசாரணை நடத்தினர்.

கஞ்சா செடி வளர்த்தேன்
நாகராஜ் போலீசாரிடம் கூறும் போது. ஞானமூர்த்தியின் அறிவுறுத்தலின் படி கஞ்சாவில் வந்த விதைகளை எடுத்து வீட்டு வாசலில் நட்டு கஞ்சா செடி வளர்த்தேன். தன் தாய் கேட்டதற்கு அழகு செடி வளர்ப்பதாக கூறினேன். கஞ்சா வாங்கி விற்பதை விட தாமே செடி வளர்த்து சாகுபடி செய்து விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் விரைவில் பணக்காரர் ஆகிவிடலாம் என நினைத்து செடி வளர்த்தேன் என ஒப்புகொண்டுள்ளார்,

இரண்டு பேர் கைது
அதை தொடர்ந்து அந்த செடிகளை அழித்த போலீசார் பிடிப்பட்ட ஞானமுர்த்தி மற்றும் நாகராஜை காட்டேரிக்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காட்டேரிக்குப்பம் போலிசார் இருவரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications