புதுவையில் அதிகரிக்கும் கொரோனா... சமூகப் பரவலா? மக்கள் எச்சரிக்கையாக இருக்க சுகாதாரத்துறை வார்னிங்
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக தொடங்கிவிட்டதா? என சந்தேகம் இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டுமென புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த புதுச்சேரியில் 4 வது கட்டமாக வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. புதுச்சேரியை விட அருகில் உள்ள தமிழக பகுதியான கடலூர், விழுப்புரத்தில் தான் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.

இதனிடையே கடந்த 4 நாட்களாக புதுவையிலும் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஆட்சியாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் கனகசெட்டிகுளம், முள்ளோடை, மதகடிப்பட்டு, திருக்கனூர் உள்ளிட்ட புதுவை மாநில 4 எல்லைகளில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
அங்கு 24 மணிநேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இ-பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார், முத்தியால்பேட்டை முத்தையா முதலியார் தெருவைச் சேர்ந்த 55 வயதுடைய நபருக்கும், ரெட்டியார்பாளையம் மூகாம்பிகை நகர் 5 வது குறுக்கு தெருவை சேர்ந்த 26 வயது வாலிபர் ஒருவருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தின் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 43 என்றும், தமிழகத்தை சேர்ந்த 6 பேரை சேர்த்தால் பாதிப்பு எண்ணிக்கை 49 என மோகன்குமார் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், புதுச்சேரியில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக தொடங்கிவிட்டதா? என சந்தேகம் இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications