புதுச்சேரியில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல்.. 144 தடை உத்தரவு அமல்.. பல புதிய கட்டுப்பாடுகள்
புதுவை: புதுச்சேரியில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு 144 தடையுத்தரவு அமலுக்கு வந்ததுள்ளது.
Recommended Video

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களில் ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. நாளை மறுநாள் மூன்று மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது..

இதனால் மூன்று மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் இன்று மாலை ஏழு மணியுடன் நிறைவடைந்தது. ஐந்து மாநிலச் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 2ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு புதுவையில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்தத் தடையுத்தரவு அடுத்த 48 மணி நேரத்திற்கு அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பிரசாரம் நிறைவடைந்துள்ள நிலையில், இனி வாக்குப்பதிவு முடிவு வரை பொதுக்கூட்டத்தையும், ஊர்வலத்தையும் எந்த அரசியல் கட்சிகளும் நடத்தக்கூடாது. மின்னணு ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்யக்கூடாது.
மேலும் சட்டவிரோத வகையில் ஒன்று கூடுதல், ஆயுதங்களை வைத்திருத்தல் ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேனர்களை வைத்திருத்தல், கோஷங்களை எழுப்புதல், ஸ்பீக்கர்கள் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுவை தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் 40 கம்பெனி துணை ராணுவ படையினர், 5000 போலீசார் ஈடுபட உள்ளனர். கொரோனா காரணமாக வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications