பாஜக எல்லாத்துக்கும் காரணம்.. அதிமுகவுக்கு இப்போ புரிஞ்சிருக்குமே.. போட்டுடைத்த கார்த்தி சிதம்பரம்
அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்து கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்
புதுக்கோட்டை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவை சேர்த்து கொள்ளாமல், புத்திசாலித்தனமாக நடந்து கொண்டுள்ளது என்று கார்த்தி சிதம்பரம் எம்பி கருத்து தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்து வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் மும்முரமாகி உள்ளன.. பல கட்சிகளில் தொகுதி பங்கீடு, பேச்சுவார்த்தைகள் இழுபறியில் உள்ளன.
இதில், திமுக, காங்கிரஸ் இடையே கடந்த ஒரு வாரமாகவே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.. முதல்வர் ஸ்டாலின், மாவட்ட செயலாளர்களிடம் பேசி கொள்ள சொல்லிவிட்டதால், அதற்கான முன்னெடுப்புகளும் நடந்து கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சி
அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட பொறுப்பாளரும் அமைச்சருமான எஸ்.ரகுபதி மற்றும் சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது... கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுக்கோட்டையில் 20 இடங்கள் ஒதுக்கப்பட்டதையடுத்து, 2 கட்சிகளுக்கும் ஒரு உடன்பாடு எட்டியது.. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தான பிறகு சிவகங்கை கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

கூட்டணி
அப்போது அவர் சொன்னதாவது: "புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது.... இது எனக்கு மிகுந்த மனநிறைவை தந்துள்ளது.. மத்திய பட்ஜெட்டை நான் இன்னும் படிக்கவே இல்லை.. அதனால் படிக்காமல் அதை பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை... நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பொறுத்த வரையில் எல்லா கட்சிகளுமே அதிக இடங்களில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற ஆசைப்படுவது இயல்புதான்.

தர்மசங்கடம்
ஆனால், கடவுளே வந்தாலும் சீட்டை கூடுதலாக கொடுக்க முடியாது... அதன் காரணமாக இப்போது கரூர் உள்பட சில இடங்களில் தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது... ஆனால், அதேசமயம், திமுக - காங்கிரஸ் கட்சி இடையே சுமூகமான சூழல் நிலவுகிறது... இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தங்களுடைய கூட்டணியில் பாஜகவை சேர்க்காமல் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டிருக்கிறது...

பாஜக
கடந்த காலங்களில் பாஜகவோடு கூட்டணி வைத்த காரணத்தால்தான் அதிமுக தோல்வி அடைந்தது... இதை எல்லாம் அதிமுக இப்போது புரிந்து கொண்டிருக்கும்.. பாஜகவோடு கூட்டணியில் இருப்பதால் சிறுபான்மையினர் மற்றும் தமிழர்களின் வாக்குகள் தங்கள் கட்சிக்கு வரவில்லை என்பதை அதிமுகவினர் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.. பாஜகவால் வரும் பாதகங்களை புரிந்து கொள்ள மட்டுமே இத்தேர்தல் உதவுமே தவிர இந்த தேர்தலில் அவர்களால் வெற்றி பெற முடியாது" என்றார்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications