நியூ இயர் 2022-க்கு புதுவை வருகிறார் சன்னி லியோன்.. கண்டிஷன் போட்ட அரசு.. ஜஸ்ட் மிஸ்ஸில் பலர்!
புதுவை: புதுச்சேரியில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாலிவுட் நடிகை சன்னிலியோன் வருகை தருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புதுவை அரசு சில நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு புத்தாண்டு தொடங்கிய போதும் உற்சாகமே இல்லாமல் இருந்தது. காரணம் கொரோனா பாதிப்பு. அது போல் 2021 ஆம் ஆண்டு புத்தாண்டிலும் கொரோனா பல வெர்ஷன்களில் இருந்ததால் அதன் பாதிப்பு அனைவரையும் அச்சமடைய செய்தது.
சரி 2022 புத்தாண்டையாவது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களுடன் கொண்டாடுவோம் என நினைத்தால் அதிலும் ஏமாற்றமே விஞ்சியது. தற்போது கொரோனாவுடன் அதன் உருமாற்றங்களான ஓமிக்ரான், டெல்மிக்ரான் உள்ளிட்டவை பரவி வருகின்றன.

ஓமிக்ரான் கேஸ்கள்
இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்கள் அதிகரித்துள்ளன. இதனால் புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளது. சில அரசு இரவு நேர ஊரடங்குகளை கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தனியார் நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடற்கரை
அது போல் டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய தேதிகளில் மக்கள் அதிகம் கூடாமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடற்கரைகளுக்கு செல்லவும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பொது இடங்கள் மற்றும் தனியார் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட புதுவை அரசு அனுமதி அளித்துள்ளது.

சுண்ணாம்பாறு
சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக டிசம்பர் 30, 31, ஜனவரி 1 ஆகிய தேதிகளில் சுண்ணாம்பாறு படகு குழாம், பாரடைஸ் கடற்கரை, ஓல்டு ஹார்பர் உள்ளிட்ட இடங்களில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இசை நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.

18 வயது
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும். மேலும் 18 வயதை அடைந்திருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளுக்குள்பட்டவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு தவணை தடுப்பூசி போட்டவர்கள் சன்னி லியோனை காண ஆர்வம் காட்டி வருகிறார்கள். 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் லேட்டாக தடுப்பூசி போட்டவர்கள் ஜனவரி 1ஆம் தேதிக்குள் அவர்களது இரண்டாவது தவணைக்கான ட்யூ வரவில்லை என்பதால் சற்று கலங்கி "ச்சே... ஜஸ்ட் மிஸ்" என மனதிற்குள் சொல்லிக் கொள்கிறார்கள். அங்கெங்க! ஒரு தவணையாவது போட்டாச்சு கொரோனா அந்தளவுக்கு பாதிக்காதுனு சந்தோஷப்பட்டா இவங்க எதுக்கெல்லாம் வருந்துறாங்க பாருங்கள்!












Click it and Unblock the Notifications