நடு ரோட்டில் வைத்து போலீசை தாக்கிய பார் ஓனர்.. ஆக்கிரமிப்பை அகற்றியதால் ஆத்திரம்!
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அரசு ஊழியர்கள் மற்றும் போலீசாரை மதுக்கடை உரிமையாளர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட மதுபானக் கடை உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் போக்குவரத்திற்கு இடையூறாக பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல், மூன்று கட்டமாக அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட 24 சாலைகளில், மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைத்து வருகின்றன. இவற்றை அகற்ற கலெக்டர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் புதுச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை கடந்த சில மாதங்களாக போலீஸ் பாதுகாப்புடன் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த் துறையினர் அகற்றி வருகின்றனர். இந்நிலையில் பலமுறை அறிவிப்பு கொடுத்தும் பெரிய காலாப்பட்டு பகுதியில் உள்ள ஒரு மதுபானக்கடையின் அறிவிப்பு பலகை அகற்றப்படாமல் இருந்தது.
இதனால் நேற்று அங்கு சென்ற அரசு ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் ஆத்திரமடைந்த மதுபானக்கடை உரிமையாளர் ராஜ்குமார் என்பவர், பெரிய இரும்பு கம்பியை கொண்டுவந்து அரசு ஊழியர்களையும், போலீசாரையும் மிரட்டினார்.
ஒருகட்டத்தில், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராஜ்குமார், அரசு ஊழியர் ஒருவரையும், போலீசாரையும் தாக்கினார். இதில் காயமடைந்த போலீசார் ஒருவர் காலாப்பட்டு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன. இந்த காட்சிகளை கொண்டு மதுபானக்கடை உரிமையாளர் ராஜ்குமார் மற்றும் ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அரசு ஊழியர்கள் மற்றும் போலீசாரை மதுக்கடை உரிமையாளர் தாக்கிய சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. வேலையை காட்டிய டெல்லி போலீஸ்! 6 பேர் அதிரடி கைது! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications