கழிவுநீர் கால்வாயில் குதித்து மூதாட்டியை காப்பாற்றிய போலீஸ்காரர்கள்! உணவும் கொடுத்து நெகிழ்ச்சி!
புதுச்சேரி: புதுவையில் கழிவுநீர் வாய்க்காலில் தவறி விழுந்த மூதாட்டியை 2 காவலர்கள் பத்திரமாக மீட்டனர். தமிழகத்தை போலவே புதுச்சேரி மாநிலத்திலும் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த நான்கு நாட்களாக புதுவை, காரைக்கால் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக புதுச்சேரி மூலக்குளம் குண்டுசாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் புதுச்சேரி உழவர்கரை மேரி வீதியை சேர்ந்தவர் சுந்தரி (80). மூலகுளம் குண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

தவறி விழுந்த மூதாட்டி
மழை அதிகமானதாலும், மழைநீர் அதிகமாக சென்றதாலும் மூதாட்டி சுந்தரி சாலையோரம் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். அப்போது மூதாட்டி சுந்தரி சாலையோரம் இருந்த கழிவுநீர் வாய்க்காலில் எதிர்பாராதவிதமாக சுந்தரி தவறி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் புதுச்சேரி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு இருந்து ரெட்டியார்பாளையம் போலீஸ்நிலையத்துக்கு தகவல் சென்றது.

காப்பாற்றிய காவலர்கள்
இதனை தொடர்ந்து ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலைய காவலர்கள் ஜெயபிரகாஷ், சரவணகுமார் இருவரும் சம்பவ இடத்துக்கு மின்னல் வேகத்தில் வந்தனர். கழிவுநீர் வாய்க்காலில் மூழ்கி போராடிய மூதாட்டியை பத்திரமாக மீட்டனர். கணவர், பிள்ளைகள் இறந்து விட்ட நிலையில் மூதாட்டி உழவர்கரை பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருவது தெரியவந்தது;

உணவும் வாங்கிக்கொடுத்துள்ளனர்
இதனை தொடர்ந்து இரண்டு காவலர்களும் மூதாட்டியை கோட்டக்குப்பத்தில் உள்ள தங்கையின் மகன் வீட்டில் ஒப்படைத்தனர். அத்துடன் கடமை முடிந்து விட்டது என்று நினைக்காமல் காவலர்கள் ஜெயபிரகாஷ், சரவணகுமார் இருவரும் மூதாட்டியின் உடைகளை மாற்றியும், அவருக்கு உணவும் வாங்கிக்கொடுத்துள்ளனர்.

பலரும் பாராட்டு
காவலர்களின் இந்த மகத்துவமான செயலை ஒருவர் தனது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மூதாட்டியை உயிருடன் காப்பாற்றியது மட்டுமில்லாமல் உடை, உணவு வழங்கிய காவலர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications