குடுமியை பிடித்துக்கொண்டு.. மாறி மாறி சண்டை போட்ட மாணவிகள்.. காரணத்தை கேட்டா.. ஆடிடுவீங்க!
புதுச்சேரி: புதுச்சேரியில் இரு பள்ளி மாணவிகள் இடையே குடுமிப்பிடி சண்டை ஏற்பட்டதால் அப்பள்ளிகளுக்கு 4 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருகாலத்தில் பள்ளி, கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்படுவது வாடிக்கையாக இருந்தது. ஆனால், தற்போது மாணவர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மாணவிகளும் கோதாவில் குதித்து விட்டார்கள் போல தெரிகிறது. கடந்த சில மாதங்களாகவே சென்னை முதல் கன்னியாகுமரி வரையில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் பொதுவெளயில் வைத்து சண்டையிட்டுக் கொள்வது அதிகரித்து வருகிறது.
சென்னை, நெல்லை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக மாணவிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெற்றோரையும், சமூக ஆர்வலர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளன. அந்த வகையில், தற்போது புதுச்சேரியில் இரு பள்ளி மாணவிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

ஒரே வகுப்பு; இரு பள்ளி மாணவிகள்
புதுச்சேரியில் உள்ள குருசுக்குப்பம் பகுதியில் சுப்பிரமணிய பாரதியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இதனிடையே, இப்பள்ளியில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் இங்கு 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவிகள், அருகில் உள்ள என்கேபி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக அமர்த்தப்பட்டனர். அங்கு ஒரே வகுப்புகளில் இரு பள்ளி மாணவிகளுக்கும் ஒன்றாக பாடம் நடத்தப்பட்டு வந்தது.

அமரும் இடம் தொடர்பாக தகராறு
இதனிடையே, கடந்த வாரம் யார் எங்கே அமர்வது என்பதில் இரு பள்ளிகளைச் சேர்ந்த சில மாணவிகளுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. பிறகு ஆசிரியைகள் சமானதானம் செய்து வைத்ததால் அந்த பிரச்சினை அப்போதைக்கு முடிவுக்கு வந்தது. எனினும், இரு தரப்பு மாணவிகளுக்கு இடையே அவ்வப்போது சிறு சிறு தகராறுகள் ஏற்பட்டு வந்த வண்ணம் இருந்தன.

வெடித்தது மோதல்
இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல பள்ளி தொடங்கி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது இரு பள்ளி மாணவிகள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் மாணவிகள் இரு பிரிவுகளாக பிரிந்து கொண்டு ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஆசிரியைகள் அங்கு சென்ற போது, மாணவிகள் வகுப்பறை கதவை மூடிவிட்டு சண்டையிட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து, விஷயம் கேள்விப்பட்ட மாணவிகளின் பெற்றோர் அங்கு குவிந்தனர். பின்னர் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே சென்று பார்த்தால் மாணவிகள் காயங்களுடன் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டிருந்தனர். பின்னர் பெற்றோர்கள் அந்த மாணவிகளை விலக்கி விட்டனர்.

4 நாள் விடுமுறை
அப்போது மாணவிகளின் பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் தலையிட்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தனர். மாணவிகளின் மோதலால் பள்ளியே கலவரபூமியாக காட்சியளித்தது. இதையடுத்து, மாணவிகளை சஜக நிலைக்கு கொண்டு செல்வதற்காக பள்ளிக்கு 4 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், சண்டையிட்டுக் கொண்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டும் வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மாணவிகள் மோதிக் கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications