ரவுடியுடன் சகவாசம்.. கணவருக்கு விஷம் கொடுத்து கொன்று.. பிணத்தை சாக்கடையில் வீசிய மனைவி!
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் கணவரைக் கொன்று உடலை கால்வாயில் வீசிச் சென்ற மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரியில் நேற்று முன்தினம் நகரின் மையப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள 100 அடி சாலை வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் போக்குவரத்து துறை இயக்குநர் அலுவலகம் அருகே உள்ள வாய்க்காலில் மூட்டையில் கட்டிய நிலையில் இளைஞரின் சடலம் கிடந்தது.
அந்த உடலை கைப்பற்றிய முதலியார்பேட்டை போலீசார் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில், அந்த இளைஞர் மூச்சடைத்தும், தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இறந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசாரின் விசாரணையில் கொலைசெய்யப்பட்ட நபர் நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்த கமல் என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் அவரது மனைவி ஸ்டெல்லா மேல் சந்தேகப்பட்டு, அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், குடும்ப தகராறு காரணமாக தனது சகோதரி ரெஜ்ஜினா, பிரபல ரவுடி தமிழ்மணி அவனது கூட்டளி இரண்டு பேருடன் சேர்ந்து தனது கணவனை கொலை செய்து பிணத்தை மூட்டையில் கட்டி 100 அடி சாலையில் வீசியதாக ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து ஸ்டெல்லாவை கைது செய்த முதலியார்பேட்டை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தார்கள்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஸ்டெல்லாவின் சகோதரி ரெஜ்ஜினா, ரவுடி தமிழ்மணி மற்றும் அவனது கூட்டாளி இருவர் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.