நாட்டிலேயே புதுச்சேரிதான் டாப்.. ஆண்களை ஓவர்டேக் செய்து அசத்தும் பெண்கள்.. 9 தேர்தல்களிலும் இதேதான்
புதுச்சேரி: மகளிர் சக்தி என்றால் என்ன என்பது புதுச்சேரி மொத்த நாட்டுக்கும் பாடம் எடுத்து வருகிறது என்று சொல்லலாம்.
ஆமாம்.. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு பொதுத் தேர்தல் நடத்தப்பட ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து இதுவரை ஆண்களை விட பெண்கள் தான் அதிக அளவுக்கு அங்கு ஓட்டு போட்டு வருகின்றனர்.
இதற்கு அடிப்படைக் காரணம் அங்கு ஆண்களை விட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை எப்போதுமே அதிகமாக இருந்து வருகிறது.

9 சட்டபை தேர்தல்கள்
1980 ஆம் ஆண்டு முதல் இதுவரை 9 சட்டசபை தேர்தல்களை சந்தித்துள்ளது அந்த யூனியன் பிரதேசம். இப்போது, அதாவது ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் உட்பட இந்த 9 தேர்தல்களிலும் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் தான் அதிகளவு வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

ஒரே கட்ட தேர்தல்
நடப்பு சட்டசபை தேர்தலின்போது புதுச்சேரியில் 30 சட்டசபைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 324 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 81.64% வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக ஏனாம் தொகுதியில் 91.27 சதவிகித வாக்குகள் பதிவாகின.

வாக்காளர்கள் எண்ணிக்கை
புதுச்சேரியில், ஆண் வாக்காளர்கள் 4, 72, 736 பெண் வாக்காளர்கள் 5,30,828 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 117 ஆவர். இதனால் ஆண்களைவிட பெண்களே அதிகமாக ஓட்டுப் போட்டுள்ளனர். பெண்களின் விருப்பம்தான் முடிவுகளில் எதிரொலிக்கப்போகிறது.

பணிகள்
இதுகுறித்து சில அரசியல் பார்வையாளர்களிடம் கேட்டபோது, மொத்தமே 10 லட்சம் வாக்காளர்கள் தான் இருப்பதால் இது சாத்தியப்படுகிறது. எண்ணிக்கை அதிகரிக்கும் போது ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம். இதற்கு காரணம், ஆண் வாக்காளர்கள் பெரும்பாலானோர் பணி நிமித்தமாக வெளிநாடுகள் அல்லது வேறு நகரங்களுக்கு செல்ல வேண்டியதாக இருக்கிறது. அதுபோன்ற சூழ்நிலைதான் புதுச்சேரியில் நிலவுகிறது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications