Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

4 மாணவிகளின் உயிரை குடித்த கரூர் காவிரி ஆறு.. தலைமையாசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் அதிரடி சஸ்பெண்ட்

கரூர் மாவட்டம் காவிரி கதவணையில் மூழ்கி புதுக்கோட்டை பிலிப்பட்டி அரசு பள்ளியின் 4 மாணவிகள் பலியான நிலையில் தலைமையாசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி புதுக்கோட்டை மாவட்டம் பிலிபட்டி அரசு பள்ளியை சேர்ந்த 4 மாணவிகள் இறந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியர்கள் என மொத்தம் 3 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பிலிப்பட்டியில் அரசு நடுநிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் வெவ்வேறு இடங்களுக்கு நடக்கும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.

அந்த வகையில் மாணவ-மாணவிகள் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த கால்பந்து போட்டியில் பங்கேற்க சென்றனர். போட்டியை முடித்துவிட்டு அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

ஆற்றில் மூழ்கிய 4 மாணவிகள்

ஆற்றில் மூழ்கிய 4 மாணவிகள்

இந்த வேளையில் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை பார்க்க விரும்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் அங்கு சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு மாணவி ஆற்றில் விழுந்து உயிருக்கு போராடினார். இதை பார்த்த மாணவிகள் கூச்சலிட்டதோடு, அவரை காப்பாற்ற முயன்றனர். இவ்வாறு அடுத்தடுத்து மேலும் 3 மாணவிகள் ஆற்றுக்குள் சிக்கினர். இதனால் 4 மாணவிகளும் ஆற்றில் மூழ்கினர்.

4 பேரும் பலியான சோகம்

4 பேரும் பலியான சோகம்

இதுபற்றி உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர் அவர்கள் விரைந்து வந்து ஆற்றில் மூழ்கியவர்களை தேடினர். அப்போது 4 மாணவிகளும் சடலமாக மீட்கப்பட்டனர். விசாரணையில் இறந்தவர்களின் பெயர்கள் தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா என்பது தெரியவந்தது. இதில் இனியாவும் லாவண்யாவும் 6 ஆம் வகுப்பு படித்து வந்தனர். தமிழரசி 7ம் வகுப்பும் சோபியா 8ம் வகுப்பும் படித்து வந்தனர்.

ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

ஆற்றில் விழுந்த மாணவியை காப்பாற்ற முயன்று அடுத்தடுத்து 4 மாணவிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் மாணவிகளின் பெற்றோர் கதறி அழுதனர். அதோடு மாணவிகளை விளையாட்டு போட்டிக்கு அழைத்து சென்ற ஆசிரியர்கள் கவனக்குறைவே மாணவிகளின் இறப்புக்கு காரணம். இதனால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கைகள் வைத்தனர்.

3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

மேலும் ஆசிரியர்களின் அலட்சியத்தால் தான் மாணவிகளின் உயிர் பறிபோனதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் தான் மாணவிகள் இறந்த விவகாரத்தில் 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொட்டுமணி, விளையாட்டு போட்டிக்கு மாணவிகளை அழைத்து சென்ற இடைநிலை ஆசிரியர் செபாசகாயூ இப்ராஹிம், பட்டதாரி ஆசிரியர் திலகவதி என 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+