லாரிக்கு அடியில் சிக்கிய கன்று.. அங்கும் இங்கும் பதறி ஓடிய பசு.. மீட்ட மக்கள்.. அவளும் தாய்தானே!

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்ட கன்றுக் குட்டியை காப்பாற்ற தாய் நடத்திய பாசப் போராட்டம் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

    லாரிக்கு அடியில் சிக்கிய கன்று.. அங்கும் இங்கும் பதறி ஓடிய பசு.. மீட்ட மக்கள்.. அவளும் தாய்தானே!

    ஐந்தறிவு உள்ள ஜீவராசிகளானாலும் சரி தன் குட்டியையோ கன்றையோ, குஞ்சையோ கண்ணை இமை காப்பது போல் காக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இது மன்னர் காலத்திலேயே நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மையாகும்.

    ஆம். சோழர் ஆட்சி காலத்தில் மனு ஆட்சியின் போது துன்பத்தில் இருக்கும் மக்கள் அங்குள்ள ஆராய்ச்சி மணியை அடித்து நீதி கேட்கலாம், உதவி கேட்கலாம்.

    அரசர்

    அரசர்

    அது போன்ற ஒரு சூழலில் ஒரு தாய் பசு ஒன்று ஒரு நாள் ஆராய்ச்சி மணியை அடித்தது. மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை. எனினும் பசுவுக்கு அருகில் போய் நின்றார். அப்போது அந்த கன்று அந்த இடத்தில் இருந்து ஓடியது. பின்னால் அரசரும் சென்றார்.

    சக்கரங்கள்

    சக்கரங்கள்

    அப்போது சாலையில் கன்றுக் குட்டி ஒன்று தேரில் அடிப்பட்டு இறந்துகிடந்தது. அப்போது மன்னன் அங்கிருந்த மக்களிடம் விசாரித்ததில் மனுவின் மகன் வீதி விடங்கன் தேர் உலா சென்ற போது அவரையே அறியாமல் கன்றின் மீது சக்கரங்கள் ஏறியதில் அது இறந்தது.

    போராட்டம்

    போராட்டம்

    இதற்கு நியாயம் கேட்கவே பசு வந்தது என்பதை அரசர் புரிந்து கொண்டார். இதையடுத்து தன் மகனையும் தேரை ஏற்றி கொன்று பசுவுக்கு நீதி வழங்கினார். இதனால் அவர் மனுநீதிச் சோழன் என்று அழைக்கப்பட்டார். அது போன்ற ஒரு பாசப் போராட்டத்தைதான் நேற்றைய தினம் ஒரு பசு நடத்தியது.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை

    கீழ் இரண்டாம் வீதியில் கடைக்கு சரக்கு இறக்குவதற்காக லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது பசுவுடன் வந்த கன்றுக்குட்டி லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்டது. லாரிக்கு அடியில் சென்ற கன்று வெளியே வர முடியாமல் அவதியடைந்தது. இதற்காக அங்கும் இங்கும் ஓடியது. அங்கிருந்த பொதுமக்கள் வந்து கன்றை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட போதிலும் அவர்களை நம்பாமல் அதுவாகவே காப்பாற்ற சுற்றி சுற்றி ஓடியது.

    வைரல்

    வைரல்

    இதையடுத்து கம்பை வைத்து தாய் பசுவை கட்டுப்படுத்த முயற்சி நடந்த நிலையில் கன்றின் கால்களை மடக்க செய்து லாரியின் வெளியிலிருந்து இழுத்தனர். இதையடுத்து கன்றை பார்த்த மகிழ்ச்சியில் பசுவும் கன்றும் ஒன்றையொன்று தழுவி கொண்டது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+