முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு! இன்று விசாரணை
புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கரின் சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை மார்ச் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையால் தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி விசாரணைக்கு வரவிருந்தது. ஆனால் நீதிபதி மாற்றுப் பணிக்கு சென்றுவிட்டதால் அந்த வழக்கு புதுக்கோட்டை குடும்ப நல நீதிமன்ற நீதிபதியிடம் சென்றது.
இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விஜயபாஸ்கரோ அவரது மனைவி ரம்யாவோ நேரில் ஆஜராகவில்லை, அவர்களது வழக்கறிஞர்களும் லஞ்ச ஒழிப்புத் துறையினரும் மட்டுமே ஆஜராகி இருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை மார்ச் 22 ஆம் தேதிக்கு நீதிபதி ஜெயந்தி ஒத்தி வைத்து உத்தரவிட்டார். அதன்படி இன்று விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications