லேட்டாக வந்த விஜய்! கரூர் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜியே காரணம்.. அமித்ஷா முன்பு நயினார் அட்டாக்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இன்று நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் விஜய் லேட்டாக வந்தார் என்றும் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜியே காரணம் என்றும் பகிரங்க குற்றச்சாட்டை வைத்தார்.
புதுக்கோட்டையில் இன்று பாஜக பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டுள்ளார். பாஜக தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல் முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் பேசியதாவது:- திமுக எப்போதாவது ஜெயிக்கும் கட்சி. ஆனால் பாஜக கூட்டணி எப்போதும் ஜெயிக்கும் கட்சி. திமுக இனி எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது. இன்னும் நிறைய கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள். அமித்ஷா உருவாக்கிய கூட்டணி மாற்றத்தை உருவாக்கும் கூட்டணி. ஒடிசாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது போலவே தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் உறுதி.
ஒடிசாவில் வீசிய அலைதான் தற்போது தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் வீசும். அதற்கான அச்சானி அமித் ஷா தான். தீபாவளிக்கு கூட வாழ்த்து சொல்ல மறுக்கிறார்கள். மதசார்பின்மையை கடைப்பிடிக்க மறுக்கிறார்கள். பாஜக தான் உண்மையாகவே மதசார்பின்மையை கடைப்பிடிக்கின்றனர். திமுக அமைச்சர்கள் பெண்களை மதிப்பதே கிடையாது. ஏளனமாக பேசுகிறார்கள்.
திமுக ஆட்சி அகற்றப்படும் வரை தேசிய ஜனநாயக கூட்டணியினர் அயராது உழைக்க வேண்டும். ஒரு கட்சியின் தலைவர் 12 மணிக்கு வர வேண்டும். ஆனால் அவர் 7 மணிக்கு வருகிறார். இதன் விளைவு 41 பேர் உயிரிழந்தனார். கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
உடனே உடற்கூராய்வு செய்யப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு காரணம் செந்தில் பாலாஜி தான். செந்தில் பாலாஜியை காப்பாற்றவே முதல்வர் ஸ்டாலின் ஓடோடி வருகிறார். வரும் தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெறும் . இவ்வாறு அவர் கூறினார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications