கஜா புயலுக்கு நிவாரணம் வழங்காத வட்டாச்சியர்.. புதுக்கோட்டையில் வாகனத்திற்கு தீ வைப்பு.. போராட்டம்!

கஜா புயலை அடுத்து சரியாக நிவாரண பணிகளை செய்யாத வாட்டாச்சியாரை கண்டித்து புதுக்கோட்டையில் மக்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: கஜா புயலை அடுத்து சரியாக நிவாரண பணிகளை செய்யாத வாட்டாச்சியாரை கண்டித்து புதுக்கோட்டையில் மக்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.

கஜா புயல் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த புயலால் 7 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இயல்பு வாழ்க்கை மொத்தமாக நசிந்து போய் உள்ளது.

Gaja Storm: People protesting against Taluk Officer in Pudukkottai for not working on Relief

இந்த புயலால் புதுக்கோட்டை மாவட்டம் மிக அதிக அளவில் சேதம் அடைந்து இருக்கிறது. அங்கு இன்னும் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. இன்னும் ஒரு வாரத்திற்கு அங்கு மின்சாரம் வருவதே சிரமம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அங்கு நிவாரண பணிகள் சரியாக நடக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. நிவாரண பணிகள் நடக்காத காரணத்தால் மக்கள் கடும் கோபம் கொண்டு இருக்கிறார்கள்.

இதையடுத்து புதுக்கோட்டை கொத்தமங்கலத்தில் வட்டாட்சியர் வாகனத்தை சிறைபிடித்து மக்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். நேற்று மாலை இந்த போராட்டம் நடந்தது.

வட்டாட்சியர் பாதுகாப்புக்கு வந்த காவல் வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் காவலர் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த போராட்டம் முற்றவே வட்டாட்சியர் வாகனம், காவல் வாகனம் உட்பட 4 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் வட்டாச்சியர் வேறு வாகனம் மூலம் திரும்பி சென்றார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+