பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக திகழும்... எங்கள் ஆதரவின்றி ஆட்சி அமைக்க முடியாது -ஹெச்.ராஜா
புதுக்கோட்டை: 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக திகழும் என அக்கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பிரதமரின் கிஸான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையில் முறைகேடு நிகழ்ந்திருப்பது வேதனைக்குரியது என்றும் இதில் தொடர்புடைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கேட்டுக்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்வகோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.

மேலும், வரும் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக திகழும் என்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவின்றி யாரும் ஆட்சியமைக்க முடியாது எனவும் ஹெச்.ராஜா கூறியிருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்தியும், உமர் அப்துல்லாவும் சொந்தமாக ஆட்சி அமைக்க முடியாத நிலையில் பாஜக ஆதரவை கோரி மெகபூபா ஆட்சி அமைத்தது போல் தமிழகத்திலும் நிலைமை மாறும் எனத் தெரிவித்திருக்கிறார்.
யார் அரசாங்கம் அமைக்க வேண்டுமென்றாலும் பாஜக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவின்றி அமைக்க முடியாத வகையில் கட்சியை வலிமைப்படுத்தி தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பது தங்கள் இலக்கு என ஹெச்.ராஜா கூறியிருக்கிறார். இதனிடையே வரும் தேர்தலில் பாஜக உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்குள் அமர்வது உறுதி என அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் மிக உறுதியாக கூறி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications